United Kingdom: இங்கிலாந்து பிரதமராக போரிஸ் ஜான்சன் நீடிப்பார் ஏன்?

Published : Jul 07, 2022, 05:44 PM ISTUpdated : Jul 07, 2022, 06:25 PM IST
United Kingdom: இங்கிலாந்து பிரதமராக போரிஸ் ஜான்சன் நீடிப்பார் ஏன்?

சுருக்கம்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் வரை இவர்தான் காபந்து பிரதமராக நீடிப்பார். அடுத்த வாரம் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று போரிஸ் அறிவித்துள்ளார்.   

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் வரை இவர்தான் காபந்து பிரதமராக நீடிப்பார். அடுத்த வாரம் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று போரிஸ் அறிவித்துள்ளார். 

டவுனிங் ஸ்டீரிட்டில் இருக்கும் பிரதமர் இல்லத்தில் இருந்து இந்த அறிவிப்பை வெளியிட்டார். விரைவில் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார், அதன் பின்னரே புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என்று அறிவித்தார்.

Conservative Party: இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார் இந்திய வம்சாவழியான ரிஷி சுனக்?

போரிஸ் ஜான்சன் ஆட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. முக்கிய குற்றச்சாட்டாக பாலியல் புகாருக்கு உள்ளான கிரிஸ் பின்ஷர் என்பவரை துணை கொறடாவாக தேர்வு செய்து இருந்தது சர்ச்சைக்கு உள்ளானது. இதையடுத்து நடந்த இடைத் தேர்தலில் கட்சி படுதோல்வியை சந்தித்து இருந்தது. இதையடுத்து, 
நிதியமைச்சராக இருந்த ரிஷி  சுனக், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சஜித் ஜாவெத் இருவரும் ராஜினாமா செய்தனர்.

United Kingdom: போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்யலைன்னா; ராணி எலிசபெத் பதவியை பறிப்பாரா?

இவர்களைத் தொடர்ந்து அதிகாரிகள், அமைச்சர்கள் என்று 50க்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரண்டு நாட்களில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் புதிய நிதியமைச்சராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நதிம் ஜவாஹி, பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் பென் வால்லேஸ் இருவரும் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். நெருக்கடிக்கு உள்ளான போரிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இங்கிலாந்து நாட்டின் சட்டத்தின்படி அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை காபந்து பிரதமாராக தற்போதைய பிரதமரே நீடிப்பார். அந்த வகையில் அடுத்த பிரதமர் தேர்வு செய்வதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. அதுவரை போரிஸ் பிரதமராக நீடிப்பார்.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
விண்வெளியில் பீரியட்ஸ் சமாளிப்பது எப்படி? வீராங்கனைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நாசா!