
டொனால்ட் டிரம்பின் பிடிவாதம் மற்றும் ராஜதந்திரத் தோல்விகளால் அமெரிக்கா இன்று ஒரு நீண்ட காலப் போருக்குள் தள்ளப்பட்டுள்ளது. ஈரான் மீதான போர் மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன் எப்போதும் இல்லாத ஒரு இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளார். போரின் தொடக்கத்தில் தனது நட்பு நாடுகளின் உதவியுடன் ஈரானை எளிதில் நசுக்கிவிடலாம் என்று டிரம்ப் போட்ட கணக்குகள் அனைத்தும் தற்போது தலைகீழாக மாறியுள்ளன. 15 நாட்களைக் கடந்த பின்னரும், போர் நின்றபாடில்லை; மாறாக, அமெரிக்கா சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.