
விடுதலை புலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பதவி விலகி விட்டதாக அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குழந்தைகள் நலத்துறை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழர்கள் உயிருடன் வாழவும், எமது பிள்ளைகள் காப்பாற்றப்பட வேண்டுமானால் மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பு உருவாக வேண்டும் என்று பேசியிருந்தார்.