சிங்கப்பூர் அதிபர் தேர்தல் 2023 : வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

Published : Sep 01, 2023, 08:50 AM IST
சிங்கப்பூர் அதிபர் தேர்தல் 2023 : வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

சுருக்கம்

சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குப் பதிவு செய்து வருகின்றனர்.  

தற்போதைய சிங்கப்பூர் அதிபர் Halimah binti Yacob பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2023 சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் GIC நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி இங் கொக் சொங் (Ng Kok Song), முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் மற்றும், NTUC Income நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டான் கின் லியென் (Tan Kin Lian) ஆகியோர் போட்டியிடுகின்றனர்

பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று காலை முதல் வாக்குபதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. சொங் பாங் (Chong Pang), மார்சிலிங்கில் (Marsiling) உள்ள வாக்குச்சாவடி நிலையங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இயந்திர கோளாற்றைச் சரிசெய்யும் வரை மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர. சுமார் அரை மணி நேரம் கழித்து சொங் பாங்கில் மக்கள் வாக்களித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மற்ற பல இடங்களில் வாக்களிப்பு சுமுகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரில் லாரியில் இருந்து விழுந்த தமிழர் ராமலிங்கம் முருகன்; ரூ. 60.86 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸி., கடற்கரையில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்! 10 பேர் பரிதாப சாவு!
பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!