AI-க்கு அமெரிக்க காங்கிரஸ் அவையில் புதிய அர்த்தம் கொடுத்த பிரதமர் மோடி; எழுந்து நின்று கைதட்டிய எம்பிக்கள்!!

Published : Jun 23, 2023, 12:09 PM IST
AI-க்கு அமெரிக்க காங்கிரஸ் அவையில் புதிய அர்த்தம் கொடுத்த பிரதமர் மோடி; எழுந்து நின்று கைதட்டிய எம்பிக்கள்!!

சுருக்கம்

பிரதமர் மோடி அமெரிக்க காங்கிரஸ் அவையில் பேசி இருந்தார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு அவையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக வரலாற்று சிறப்பு மிக்க உரையை நிகழ்த்தினார். 

பிரதமர் மோடி தனது பேச்சில், ஜி20-ல் ஆப்பிரிக்காவை சேர்க்கும் திட்டத்தை ஏற்றுக்கொண்டதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மேலும் அவர் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை பாராட்டினார். செயற்கை நுண்ணறிவு முதல் சமோசா வரை அனைத்தையும் குறிப்பிட்டு மோடி கைதட்டல் பெற்றார். பிரதமர் மோடியின் பேசியபோது, ​​​​அமெரிக்க காங்கிரஸில் 79 முறை கைதட்டல் ஒலித்தது. 15 முறை எம்.பி.க்கள் எழுந்து நின்று மோடிக்கு மரியாதை செய்தனர். இதுமட்டுமின்றி, பிரதமர் உரை முடிந்ததும் அவருடன் செல்ஃபி எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும்  போட்டி ஏற்பட்டது. 

பிரதமர் மோடியின் உரையின் முக்கிய அம்சங்கள்:

* ஜி20 நாடுகளில் ஆப்பிரிக்காவை சேர்க்கும் இந்தியாவின் திட்டத்தை ஏற்றுக்கொண்டதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

* ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற ஜி20 கரு பற்றி பேசிய பிரதமர் மோடி, இந்தியா-அமெரிக்க உறவுகள் முழு உலகிற்கும் உத்வேகம் அளிப்பதாக விவரித்தார்.

* இந்தியாவும் அமெரிக்காவும் சிறந்த ஜனநாயக நாடுகள் என்றும் அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றுவது 140 கோடி இந்திய மக்களுக்கு கிடைத்த பெருமை என்றார்.

* இந்திய-அமெரிக்க உறவுகளை செயற்கை நுண்ணறிவுடன் ஒப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, AI என்பதற்கு இந்தியா மற்றும் அமெரிக்கா என்ற மற்றொரு அர்த்தம் உள்ளது என்றார். அப்போது, ​​சபையில் மோடி, மோடி என்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன.

* பிரதமர் மோடி தனது உரையின் போது ரஷ்யா - உக்ரைன் போர் பற்றியும் குறிப்பிட்டார். இது போருக்கான நேரம் அல்ல. அனைத்து பிரச்சனைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றார்.

“நான் பிரதமரான பிறகு பலமுறை வெள்ளை மாளிகைக்கு சென்றுள்ளேன்.. ஆனால்..” பிரதமர் மோடி பேச்சு

* அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆங்கிலத்தில் உரையாற்றினார். வசுதைவ குடும்பகம் என்ற கருத்தை நாங்கள் நம்புகிறோம். அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் உள்ளனர், அவர்களின் வேர்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் சமோசா காக்கஸ் (சட்டமியற்றும் குழுவைச் சேர்ந்தவர்கள்) என்று அழைக்கப்பட்டனர்.

* இந்தியாவின் பெண்கள் சிறந்த எதிர்காலத்தை வழிநடத்துகிறார்கள். பழங்குடி சமூகத்தின் பெண் இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருக்கிறார். நாட்டில் 15 லட்சம் பெண் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

* ​​அனைவரின் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி, அனைவரின் முயற்சியையும் குறிப்பிட்டார். இந்தியாவில் வலுவான உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம்.

* ஜனநாயகம் என்பது பண்பாடு, நமது எண்ணங்களை பிரதிபலிக்க உதவுகிறது.

* இந்தியா வளர்ச்சியடையும் போது, ​​உலகம் முழுவதும் வளரும். இந்தியாவில் உள்கட்டமைப்புடன் டிஜிட்டல் இந்தியா கட்டமைக்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுடன் நாங்கள் முன்னேறி வருகிறோம்.

* பயங்கரவாதத்தைத் தாக்கிப் பேசிய பிரதமர், பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதத்திற்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் தோளோடு தோள் சேர்ந்து நடக்கின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்என்றார். 

* கொரோனா தொற்றுநோயைத் தடுக்க இந்தியா 200 கோடி டோஸ் தடுப்பூசியை உருவாக்கியது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி பிரச்சாரத்தை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது.

முகேஷ் அம்பானி முதல் சுந்தர் பிச்சை வரை.. அமெரிக்க வெள்ளை மாளிகை விருந்தில் பங்கேற்றவர்கள் யார்? யார்?

* பொருளாதார முன்னேற்றம், பெண்கள் மேம்பாடு இந்தியாவில் நன்றாக செயல்பட்டு வருகிறது.  இந்தியாவில் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் 50 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.

* உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் இந்தியா. எமது அரசாங்கம் அமையும் போது 10வது இடத்தில் இருந்த நாங்கள் தற்போது ஐந்தாவது இடத்தில் இருக்கிறோம். விரைவில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாறப் போகிறது.

* இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. இந்தியாவில் ஓராயிரம்  மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் ஒரே குரலில் பேசி வருகிறோம். ஒவ்வொரு நூறு மைலுக்கும் நமது உணவுப் பழக்கம் மாறுகிறது. இந்த வேறுபாடுகளுடன் கூடிய பலத்தின் ஒற்றுமை.

* இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 50 கோடி பேருக்கு பலன்களை வழங்கி வருகிறோம். 

* இந்திய-அமெரிக்க உறவுகளைப் பற்றி விவாதித்த பிரதமர் மோடி, “இரண்டு நூற்றாண்டுகளாக நாம் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்பட்டு வருகிறோம். மார்ட்டின் லூதர் கிங் மற்றும் மகாத்மா காந்தி இரு நாடுகளின் சிறந்த தலைவர்களாக இருக்கின்றனர். அவர்கள் இருவரும் இந்தியா-அமெரிக்காவில் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர். 

* இது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புறவின் புதிய சகாப்தம். எங்களுக்குள் பரஸ்பர நம்பிக்கை அதிகரித்துள்ளது. ஜனநாயகம் என்பது சமத்துவம் மற்றும் மரியாதைக்கு ஈடானது.  இந்தியா ஜனநாயகத்தின் தாய்.

* அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை பிரதமர் மோடி பாராட்டினார். இங்கு பலர் உள்ளனர், அவர்களின் வேர்கள் இந்தியாவில் உள்ளன. கமலா ஹாரிஸ் சரித்திரம் படைத்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு சபையில் கைதட்டல் எழுந்தது.

எங்களது ரத்தத்தில் ஜனநாயகம் என்ற டிஎன்ஏ இருக்கிறது; செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி பளிச்!!

* அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, எங்களுக்காக உங்கள் வீட்டின் கதவுகளைத் திறந்துவிட்டீர்கள். முதல் பெண்மணி ஜில் பைடனுக்கும் நன்றி தெரிவித்தார். இரவு உணவிற்கு என்னை அழைத்ததற்கு இருவருக்குமே நன்றி என்றார்.

* அமெரிக்க காங்கிரஸில் இரண்டாவது முறையாக உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய-அமெரிக்க உறவுகளுக்கு புதிய பரிமாணத்தை கொடுக்க வேண்டிய நேரம் என்றார். 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு