
இந்தியா நடத்தும் ஏஐ-இந்தியா தாக்க உச்சிமாநாடு 2026, செயற்கை நுண்ணறிவு (AI) உலகளாவிய உரையாடலுக்கு புதிய திசையை வழங்கியுள்ளது. மக்கள், பூமி, முன்னேற்றம் என்ற மூன்று அடிப்படை சூத்திரங்களையும், ஏழு செயல் சக்கரங்களையும் மையமாகக் கொண்டு, இந்த மாநாடு வளர்ச்சி சார்ந்த மற்றும் பொறுப்பான AI கட்டமைப்பை முன்னிறுத்துகிறது. தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமல்ல, அது சமூக நலனுக்கும் நிலையான வளர்ச்சிக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த மேடையை இந்தியா பயன்படுத்தியுள்ளது.
கொள்கை வடிவமைப்பு மற்றும் நடைமுறை அமலாக்கத்தை இணைக்கும் முயற்சியாக இந்த உச்சிமாநாடு பார்க்கப்படுகிறது. புதுமைகளை பொதுநல நோக்கங்களுடன் இணைப்பதன் மூலம், AI பயன்பாட்டு கட்டுப்பாடுடன் பொறுப்புடனும் வளர வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. இதன் மூலம், இந்தியா உலக AI ஒத்துழைப்பில் ஒருங்கிணைப்பாளராகவும் நம்பகமான கூட்டாளியாகவும் தன்னை நிலைநிறுத்துகிறது.
உலக தொழில்நுட்பத் தலைவர்களும் இந்த முயற்சியைப் பாராட்டியுள்ளனர். கூகுள் டீப் மைண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டெமிஸ் ஹசாபிஸ், உலகம் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு காலத்தின் நுழைவாயிலில் நிற்கும் இந்த தருணத்தில் இந்தியா எடுத்துள்ள இந்த முயற்சி முக்கியமானது என்று குறிப்பிட்டார். AI துறையில் அதிவேக முன்னேற்றம் நடைபெறும் நிலையில், அபாயங்களை கட்டுப்படுத்த சர்வதேச உரையாடல் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அடுத்த 5 முதல் 8 ஆண்டுகளில் அதிக தன்னாட்சி கொண்ட AI அமைப்புகள் உருவாகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார். மருத்துவம், அறிவியல், காலநிலை மாற்றம் மற்றும் மனித ஆரோக்கியம் போன்ற துறைகளில் AI பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவித்தார். ஆனால், இந்த வாய்ப்புகள் அனைவருக்கும் பயனளிக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், AI-யின் உண்மையான தாக்கம் பயன்பாடுகள் மூலம் தான் வெளிப்படும் என்று கூறினார். டெவலப்பர்கள் மற்றும் அதிகமான பயன்பாட்டு தளங்களைக் கொண்ட இந்தியா, AI பயன்பாட்டில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக மாறும் திறன் கொண்டது.
பிரதமர் நரேந்திர மோடியும் AI-யை “சக்தி பெருக்கும் கருதி” என விவரித்தார். இது மனித திறன்களை விரிவுபடுத்தும் கருவி என அவர் குறிப்பிட்டார். AI காரணமாக வேலைவாய்ப்புகள் குறையும் என்ற அச்சம் இருந்தாலும், சரியான திறன் மேம்பாடு மூலம் இளைஞர்கள் எதிர்காலத்தை வழிநடத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
AI காரணமாக சில பணிகள் மாறுபடலாம். ஆனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பது வரலாறு காட்டிய உண்மை என்று பிரதமர் மோடி கூறினார். இந்தியா ஏற்கனவே AI ஆராய்ச்சி மற்றும் திறன்களில் முன்னேற்றம் கண்டுள்ளது என்று கூறினார்.
பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெறும் இந்த உச்சிமாநாடு, உரையாடலைச் செயல்பாட்டாக மாற்றும் ஒரு முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது. பொறுப்பான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளர்ச்சி சார்ந்த AI பாதையை உருவாக்க இந்தியாவின் உறுதிப்பாட்டை இது வலுப்படுத்துகிறது.