இந்தியா மீது பாகிஸ்தான் ஏவிய துருக்கி தயாரிப்பு சோங்கர் ட்ரோன்கள்.! காரணம் என்ன.?

Published : May 09, 2025, 08:47 PM IST
இந்தியா மீது பாகிஸ்தான் ஏவிய துருக்கி தயாரிப்பு சோங்கர் ட்ரோன்கள்.! காரணம் என்ன.?

சுருக்கம்

பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் 300 முதல் 400 ட்ரோன்களை அனுப்பியதாகவும், இந்திய வான் பாதுகாப்பு படையினர் அவற்றை சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி தயாரிப்பு ஆசிஸ்கார்ட் சோங்கர் ட்ரோன்களை பயன்படுத்தியதாகவும், தடயவியல் பகுப்பாய்வு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா பாகிஸ்தான போர் பதற்றம் : பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான நிலையானது நீடித்து வருகிறது. இரு தரப்பும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவில் 36 இடங்களை குறிவைத்து 300 முதல் 400 ட்ரோன்களை அனுப்பியது. இதனால் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியா- பாகிஸ்தான் எல்லையோர மக்கள் அலர்ட் செய்யப்பட்டனர். இந்த சூழ்நிலையில் ட்ரோன்களை  இந்திய வான் பாதுகாப்பு கவசம் தாக்கி சிதறடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக கர்னல் சோபியா குரேஷி செய்தியாளர்களிடம் கூறுகையில், நேற்று இரவு லே முதல் சர் க்ரீக் வரை 36 இடங்களில் எங்கள் ராணுவ தளங்களை குறிவைத்து 300-400 ட்ரோன்களை பாகிஸ்தான் அனுப்பியதாக தெரிவித்தார்.

உளவுத்துறை தகவல்களைச் சேகரிப்பது மற்றும் எங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சோதிப்பதே அவர்களின் நோக்கமாக இருந்திருக்கலாம் இந்த ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது. துருக்கி தயாரிப்பு ஆசிஸ்கார்ட் சோங்கர் ட்ரோன்களை பயன்படுத்தியதாக கர்னல் சோபியா குரேஷி தெரிவித்தார்.  ட்ரோன் சிதைவுகள் தற்போது தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். 

ஆசிஸ்கார்ட் சோங்கர் ட்ரோன்கள் என்றால் என்ன?

துருக்கியின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதமேந்திய ட்ரோன் அமைப்பான சோங்கரை தயாரிக்கும் நிறுவனம் அங்காராவில் உள்ள ஒரு பாதுகாப்பு நிறுவனமான ஆசிஸ்கார்ட் ஆகும். 2019 ஆம் ஆண்டு இந்த சேவையில் நுழைந்த குவாட்ரோட்டர் ஆளில்லா போர் வான்வழி வாகனம் (UAV) சோங்கர், தொலைதூரத்தில் அல்லது தனாக இயங்கக்கூடியதால், சமச்சீரற்ற போர் மற்றும் எல்லை தாண்டிய பணிகளுக்கு பொருந்தக்கூடியது.

இந்த ட்ரோனில் தானியங்கி இயந்திர துப்பாக்கி, மினி ஏவுகணைகள் மற்றும் 81 மிமீ மோட்டார் குண்டுகளால் ஆயுதம் ஏந்திய சோங்கர், வாகனங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட நிலைகள் உள்ளிட்ட பல்வேறு இலக்குகளை தாக்க ஈடுபடுத்த முடியும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ட்ரோனும் தானியங்கி இயந்திர துப்பாக்கியுடன் பொருத்தப்பட்டுள்ளது, இது 200 சுற்றுகள் 5.56×45 மிமீ நேட்டோ-தர வெடிமருந்துகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.

ஆசிஸ்கார்ட் சோங்கர் ட்ரோன்கள் செயல்பாடு என்ன.?

ட்ரோன் ஏவுதலில் 45 கிலோ வரை எடுத்துச் செல்ல முடியும்,  தரை கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து 3 முதல் 5 கிலோமீட்டர் தொலைவில் இயங்க முடியும். இது தரையில் இருந்து 400 மீட்டர் உயரத்திலும், கடல் மட்டத்திலிருந்து 2,800 மீட்டர் உயரத்திலும் செயல்பட முடியும். நிகழ்நேர வீடியோ மற்றும் டெலிமெட்ரி தரவை வழங்குகிறது, இது பணிக்குப் பிந்தைய பகுப்பாய்வு, இலக்கு கண்டறிதல் மற்றும் நேரடி கண்காணிப்பு ஆகியவற்றை செயல்படுத்துகிறது. இது பகல் அல்லது இரவில் இயங்கும் மற்றும் அகச்சிவப்பு மற்றும் பகல்நேர கேமராக்கள் இரண்டிலும் பொருத்தப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நள்ளிரவில் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாக். பிரதமர்.. இம்ரான் கானின் நிலை..?
ஈரானிடம் நடுங்கும் டிரம்ப்... அமரிக்க கப்பல்களுக்கு தண்ணீருக்கு அடியில் புதை குழி தோண்டிய காமெனி..!