தலைமை மருத்துவமனை அருகே தற்கொலை படை தாக்குதல்... 3 பேர் உடல் சிதறி உயிரிழப்பு..!

Published : Jul 21, 2019, 12:41 PM IST
தலைமை மருத்துவமனை அருகே தற்கொலை படை தாக்குதல்... 3 பேர் உடல் சிதறி உயிரிழப்பு..!

சுருக்கம்

பாகிஸ்தானில் தலைமை மருத்துவமனை அருகே தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தானில் தலைமை மருத்துவமனை அருகே தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தான் நாட்டில் தேரா இஸ்மாயில் கான் தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் அருகே இன்று தீவிரவாதிகள் திடீரென தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயம் அடைந்தனர். 

இந்த தாக்குதல் தொடர்பாக தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலை அடுத்து அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!