கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட பாகிஸ்தான்... சோத்துக்கே அல்லாடப்போகும் பரிதாபம்..!

Published : Aug 23, 2019, 03:43 PM IST
கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட பாகிஸ்தான்... சோத்துக்கே அல்லாடப்போகும் பரிதாபம்..!

சுருக்கம்

பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான FATF, பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.  

பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான FATF, பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கப்படுவது மற்றம் சட்ட விரோத பணபரிவர்த்தனை ஆகியவற்றை தடுப்பதற்காக ஆசிய – பசிபிக் குழுமம்  நிர்ணயித்துள்ள 40 விதிகளில் 32 விதிகளை பாகிஸ்தான் கடைப்பிடிக்கவில்லை. இது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் நடைபெற்ற FATF மற்றும் APG ஆகியவற்றின் ஆலோசனை கூட்டத்தில் பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்க்கலாமா என்பது பற்றி 7 மணி நேரத்திற்கும் அதிகமாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனையின் முடிவில் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச நிதி அமைப்பான FATF இடம் இருந்து பாகிஸ்தான் நிதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

தொடர்ந்து கறுப்பு பட்டியலில் இருப்பதை தடுக்க 2019-ஆம் அக்டோபர் மாதத்திற்குள் பாகிஸ்தான், பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுத்தே ஆக வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் சர்வதேச அமைப்புக்களிடம் இருந்து பாகிஸ்தான் நிதி பெற முடியாத நிலை ஏற்படும்.

PREV
click me!

Recommended Stories

Ind Vs Pak Nuclear War: இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் அணு ஆயுதப் போர்? வெளியான பரபரப்பு ரிபோர்ட்
சீனாவுடன் கைகோர்த்த-ஈரான்..! அமெரிக்காவை அதிரவைக்கும் ரகசிய ஆயுத ஒப்பந்தம்..! 3ம் உலகப்போருக்கான அஸ்திவாரம்?