இன்னும் 5மணி நேரத்தில் தீர்ந்துபோகும் ஆக்ஸிஜன்! கடலுக்குள் சென்றவர்களின் கதி என்னவாகும்? தேடும் பணி தீவிரம்!

Published : Jun 22, 2023, 03:38 PM ISTUpdated : Jun 22, 2023, 03:49 PM IST
இன்னும் 5மணி நேரத்தில் தீர்ந்துபோகும் ஆக்ஸிஜன்!  கடலுக்குள் சென்றவர்களின் கதி என்னவாகும்? தேடும் பணி தீவிரம்!

சுருக்கம்

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை காணச் சென்ற சுற்றுலா பயணிகளின் நீழ்ழுழ்கி கப்பல் மாயமான நிலையில், அதில் இன்னும் 5 மணி நேரம் மட்டுமே ஆக்ஸிஜன் இருப்பு இருக்கும் நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை காணச் சென்ற சுற்றுலா பயணிகளின் நீழ்ழுழ்கி கப்பல் மாயமான நிலையில், அதில் இன்னும் 5 மணி நேரம் மட்டுமே ஆக்ஸிஜன் இருப்பு இருக்கும் நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காக, 21அடி கொண்ட நீர் மூழ்கி கப்பல் ஒன்று 5 சுற்றுலா பயணிகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்லாண்டிக் கடலில் புறப்பட்டுள்ளது. புறப்பட்ட 2 மணி நேரத்தில், நீர் மூழ்கி கப்பல் தனது சிக்னலை இழந்தது. நீர் முழ்கி கப்பலில் பயணித்த பயணிகளின் நிலைமை இப்போது வரை தெரியவில்லை. மாயமானவர்களை மீட்கும் பணியில் கனடா - அமெரிக்கா கடற்படைகள் இறங்கியுள்ளன.



நீர்மூழ்கி கப்பலை தேடும் முயற்சியில் C-130 விமானம் மூலம் தொடர்ந்து வருகிறது. மீட்புக் குழுவினரின் தகவல்படி, நீர்மூழ்கிக் கப்பலில் விமானி உட்பட ஐந்து பேரை ஏற்றிச் செல்ல முடியும். மேலும் 70 முதல் 96 மணி நேரம் ஆக்ஸிஜன் வசதி இருக்கும் நிலையில் தற்போதைய நிலவரப்படி இன்னும் 5 மணி நேரத்திற்கும் குறைவான அளவே ஆக்ஸிஜன் இருப்பு உள்ளது.

21 அடி கொண்ட இந்தக் கப்பலில் நான்கு நாட்கள் அவசர காலத் திறன் உள்ளது. நீர்மூழ்கிக் கப்பல் OceanGate Expeditions நிறுவனத்தைச் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!