இம்ரான்கானுக்கு சட்டவிரோதமாக பிறந்த குழந்தை.!! அமெரிக்காவுக்கு கடிதம் என மிரட்டும் நவாஸ் ஆதரவாளர்கள்..!!

Published : Mar 03, 2020, 04:23 PM IST
இம்ரான்கானுக்கு சட்டவிரோதமாக பிறந்த குழந்தை.!!  அமெரிக்காவுக்கு கடிதம் என மிரட்டும் நவாஸ் ஆதரவாளர்கள்..!!

சுருக்கம்

லண்டனில்  மருத்துவமனையில் சேரப்போவதாக  கூறிய அவர்,   அங்குள்ள ஒரு உணவகத்தில் உறவினர்களுடன் உணவு அருந்துவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியானது .  இதனையடுத்து அவருக்கு ஜாமீனை நீட்டிக்க இஸ்லாமாபாத் நீதிமன்றம் மறுத்துவிட்டது . 

நவாஸ் ஷெரீப்பை நாடு  நடத்தும்படி இங்கிலாந்து அரசுக்கு பாகிஸ்தான் அரசு கடிதம் எழுத முடிவு செய்துள்ளது .  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீது ஊழல் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது .  அல் அஜீஸியா மில்ஸ் எனும் ஊழல் வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது .  இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால்  அவருக்கு இங்கிலாந்தில் சிகிச்சை வழங்க வேண்டும் என அவரது தரப்பில் கூறப்பட்டது .  அதை ஏற்றுக்கொண்ட  இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது . மற்றொரு வழக்கிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்தது .  இந்நிலையில்  கடந்த நவம்பர் மாதம் நவாஸ் ஷெரீப்  சிகிச்சைக்காக லண்டன் சென்றார்.

 

லண்டனில்  மருத்துவமனையில் சேரப்போவதாக  கூறிய அவர்,   அங்குள்ள ஒரு உணவகத்தில் உறவினர்களுடன் உணவு அருந்துவது போன்ற  புகைப்படம் ஒன்று வெளியானது .  இதனையடுத்து அவருக்கு ஜாமீனை நீட்டிக்க இஸ்லாமாபாத் நீதிமன்றம் மறுத்துவிட்டது .  அவர் ஜாமீன் கோர மருத்துவ ரீதியான எந்த காரணமும் இல்லாததால் அவருடைய ஜாமீனை நீட்டிக்க முடியாது எனவும் அவரை உடனே பாக்கிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என  கடிதம் எழுதவும் பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது . இதுகுறித்து  பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு உதவியாளர் கூறியதாவது :- நவாஸ் ஷெரிப்பின்  உடல்நிலை காரணமாக அவருக்கு ஜாமின் அளிக்கப்பட்டது .  ஆனால் அதை அவர் முறையாக பயன்படுத்தவில்லை .  மருத்துவமனையிலும் இதுவரையில் அவர் சேரவில்லை . எனவே அவரை நாடு கடத்த இங்கிலாந்து அரசுக்கு கடிதம் எழுத கொள்கை அளவில் முடிவு செய்துள்ளோம் எனக் கூறியுள்ளார் .

 

இந்நிலையில் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில் ,  நவாஸ் ஷெரிப் குறித்து இம்ரான்கான் இங்கிலாந்துக்கு  கடிதம் எழுதினால்,  இம்ரான் கானுக்கு சட்டவிரோதமாக பிறந்தகுழந்தை தொடர்பான வழக்கை மீண்டும் தோண்டி எடுக்குமாறு அமெரிக்க அரசுக்கு நாங்கள் கடிதம்  எழுதுவோம் .  நவாஸ் ஷெரிப் இதய கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார் .  அவருக்கு விரைவில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது .  நவாஸ் ஷரீபின் உடல்நிலையில் விளையாடாமல் தேச நலனில் இம்ரான்கான் அக்கறை செலுத்த வேண்டுமென காட்டமாக கூறியுள்ளார்.  
 

PREV
click me!

Recommended Stories

அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு.. ஒரு மாணவர் பலி சந்தேக நபர் கைது!
யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை! பிரதமர் மோடி மகிழ்ச்சி!