தென்னாப்பிரிக்காவில் அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 63 பேர் உடல் கருகி உயிரிழப்பு!!

Published : Aug 31, 2023, 12:55 PM IST
தென்னாப்பிரிக்காவில் அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 63 பேர் உடல் கருகி உயிரிழப்பு!!

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 63 பேர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 63 பேர் உயிரிழந்து, 43 பேர் காயமடைந்ததாக அவசரகால மேலாண்மை சேவை தெரிவித்துள்ளது. அந்த நாட்டில் இருந்து வெளிவரும் பத்திரிக்கைகளும் இந்த செய்தியை உறுதி செய்துள்ளன. 

பெருமளவில் தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அவசரகால சேவை அதிகாரி ராபர்ட் முலாட்ஸி கூறுகையில், ''இந்தக் கட்டிடத்தில் சட்டத்திற்கு மாறாக குடியேறி உள்ளனர். வீடு இல்லாதவர்கள் எந்த முறையான குத்தகை ஒப்பந்தங்களும் இல்லாமல் இங்கு குடியேறி உள்ளனர். இதுதான் இறந்தவர்களின் உடலை தேடுவதிலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

கம்ப்யூட்டரே பொறாமைப்படும்.. உலகின் மிகச்சிறந்த இந்த கையெழுத்து யாருடையது தெரியுமா?

அதிபர் தேர்தலில் போட்டியிடும் தர்மன் கையில் அதிர்ஷ்டம் அளிக்கும் தங்கநிற அன்னாசிப் பழம்!

இந்தக் குடியேற்றத்தில் சுமார் 200க்கும் அதிகமானவர்கள் வரை வசித்து வந்து இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதத்தின் அளவு இன்னும் கண்டறியப்படவில்லை. மற்ற ஆப்ரிக்க நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் இந்தக் கட்டிடத்தில் வசித்து வந்ததாக தெரிய வந்துள்ளது.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
விண்வெளியில் பீரியட்ஸ் சமாளிப்பது எப்படி? வீராங்கனைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நாசா!