இரண்டு கன்னியாஸ்திரிகள் கர்ப்பம்... கதிகலங்கி போன பாதிரியார்கள்..!

Published : Nov 07, 2019, 05:36 PM ISTUpdated : Nov 07, 2019, 05:42 PM IST
இரண்டு கன்னியாஸ்திரிகள் கர்ப்பம்... கதிகலங்கி போன பாதிரியார்கள்..!

சுருக்கம்

கன்னியாஸ்திரிகளுள் 34 வயதான ஒருவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக உள்ளதை கண்டுபிடித்தனர். அப்போது,  அங்கு சென்ற 34 வயதான  ஒரு கன்னியாஸ்திரிக்கு தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். அதேபோல், மூத்த கன்னியாஸ்திரியான மற்றொருவரும் ஒரு மாதத்திற்கும் முன் கர்ப்பமுற்ற சம்பவம் தெரிவந்துள்ளது. 

இத்தாலி நாட்டில் இரண்டு கன்னியாஸ்திரிகள் கர்ப்பமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபகாலமாக கன்னியாஸ்திரிகள் சிலர் பாதிரியார்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளாவதாகக் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. அந்த வகையில் இத்தாலியில் சிசிலி துணைப்பிரிவை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் தங்களுடைய தொண்டு சேவை பணியின் ஒரு பகுதியாக ஆப்பிரிக்கா கண்டத்திற்கு சென்றுள்ளனர். 

அங்கு சென்ற கன்னியாஸ்திரிகளுள் 34 வயதான ஒருவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்பமாக உள்ளதை கண்டுபிடித்தனர். அப்போது,  அங்கு சென்ற 34 வயதான  ஒரு கன்னியாஸ்திரிக்கு தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். அதேபோல், மூத்த கன்னியாஸ்திரியான மற்றொருவரும் ஒரு மாதத்திற்கும் முன் கர்ப்பமுற்ற சம்பவம் தெரிவந்துள்ளது. 

இந்நிலையில், கன்னியாஸ்திரி வாழ்க்கையின் தகுதியை இழந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க நிலைக்கு திருச்சபை தள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் பாதிரியார்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ரோமில் உள்ள திருச்சபை ஒன்று கூறுகையில், இரண்டு கன்னியாஸ்திரிகளும் சொந்த நாட்டுக்கு சென்ற இடத்தில் வெளிப்படையான பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கற்புக்கான விதிமுறையை மீறியதால் இனி அவர்கள் துறவு வாழ்க்கை வாழமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்பாக இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஒரு சில கன்னியாஸ்திரிகள் பாதிரியார்களால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக போப்பாண்டவர் திருச்சபையில் சிலர் ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

PREV
click me!

Recommended Stories

உலக AI மேடையில் இந்தியா.. பிரதமர் மோடி கொடுத்த நம்பிக்கை
இம்ரான் கானுக்காக களமிறங்கிய 14 EX சர்வதேச கிரிக்கெட் கேப்டன்கள்.. கடுப்பில் பாகிஸ்தான் பிரதமர்..!