காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 38 பேர் பலி!!

Published : May 26, 2025, 12:54 PM IST
Gaza

சுருக்கம்

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகள் அணுக முடியாத நிலையில் உள்ளன, மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து வருகிறது. போர் நிறுத்தத்திற்குப் பின்னர் 3,785 பேர் பலியாகியுள்ளனர்.

காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் குழந்தைகள் உட்பட குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டதாக அசோசியேட்டட் பிரஸ் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூர் சுகாதார அதிகாரிகள் குறைவாக இருப்பதால், மனிதாபிமான நெருக்கடி தொடர்ந்து மோசமடைந்து வருவதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னர் 3,785 பேர் பலி

வடக்கு காசாவில் உள்ள மருத்துவமனைகள் அணுக முடியாத நிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இரண்டாவது நாளாக நடந்த உயிரிழப்பு தொடர்பான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை என்று காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததிலிருந்து, குறைந்தது 3,785 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்து இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மருத்துவர் இழந்த ஒன்பது குழந்தைகள்

கான் யூனிஸ் அருகே வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் குழந்தை மருத்துவர் அலா அல்-நஜ்ஜார் தனது பத்து குழந்தைகளில் ஒன்பது பேரை இழந்து இருந்தார். தற்போதும் இவரது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். "அவர்கள் அப்பாவி குழந்தைகள்," என்று அவரது மைத்துனர் இஸ்மாயில் அல்-நஜ்ஜார் குறிப்பிட்டுள்ளார். ''எனது சகோதரருக்கு எந்த தீய பிரிவுகளுடன் எந்த தொடர்பும் இல்லை" என்று இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார். ஒரு குழந்தை மற்றும் அவரது கணவர் மட்டுமே உயிர் பிழைத்ததாக தெரிவித்துள்ளார். இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்த செய்திக்கு மறுபரிசீலனை செய்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மக்கள் தொகை அதிகம் இருக்கும் இடங்களில் ஹமாஸ் செயல்படுவதாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

காசாவில் மனிதாபிமான நிலைமை மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. உதவி நடவடிக்கைகளில் சுதந்திரம் இல்லாததைக் காரணம் காட்டி, அமெரிக்க ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளையின் தலைவரான ஜேக் வுட் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளார். "மனிதநேயம், நடுநிலைமை, பாரபட்சமற்ற தன்மை மற்றும் சுதந்திரம் ஆகிய மனிதாபிமானக் கொள்கைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கும் அதே வேளையில் சுதந்திரம் இல்லை. இது இல்லாமல் திட்டங்களை செயல்படுத்துவது சாத்தியமில்லை" என்று வுட் கூறியதாக AP மேற்கோல் காட்டியுள்ளது.

காசாவில் குறைந்தது உதவி டிரக்குகள்

காசாவிற்குள் ஞாயிற்றுக்கிழமை 107 உதவி டிரக்குகளை அனுமதித்ததாக இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் ஐ.நா. இது போதுமானதாக இல்லை என்று கூறியது. ஏனெனில் போர் நிறுத்தத்தின் போது இப்பகுதியில் முன்பு தினமும் 600 உதவி டிரக்குகள் இருந்தன. ஹமாஸ் இதை தடுப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. இதை ஐ.நா. உலக உணவுத் திட்டத் தலைவர் சிண்டி மெக்கெய்ன் மறுத்து, "காசா மக்கள் உலக உணவுத் திட்ட லாரி வருவதைப் பார்த்து, அதன் பின்னால் ஓடுகின்றனர்'' என்று தெரிவித்து இருப்பதாக ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது வரை நீடித்து வரும் இந்தப் போரால், 1,200 பேர் கொல்லப்பட்டு, 251 பணயக்கைதிகளை கடத்தப்படுவதற்கு வழி வகுத்ததாகவும் கூறப்படுகிறது. 53,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய உயிர்களைக் கொல்லப்பட்டு இருப்பதாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது, கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஆயுதக் குறைப்புப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குவதற்கு முன்பு, தெற்கு லெபனான் எல்லைப் புள்ளிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்று ஹிஸ்புல்லா துணைத் தலைவர் நைம் காசெம் கோரினார். ஞாயிற்றுக்கிழமை ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணையை இஸ்ரேல் இடைமறித்தது. இது ஜெருசலமில் வான்வழித் தாக்குதல் சைரன்களை எழுப்பியது. ஆனால், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

ராஜதந்திர மற்றும் மனிதாபிமான சவால்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலுக்கு விஜயம் செய்தார். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தார்.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஜப்பானை உலுக்கிய 7.5 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!
பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!