பங்களாதேஷில் மீண்டும் ஒரு இந்து சுட்டுக்கொலை! 3 வாரத்தில் 5-வது பலி!

Published : Jan 05, 2026, 10:03 PM IST
bangladesh hindu murder

சுருக்கம்

வங்கதேசத்தின் ஜஷோர் மாவட்டத்தில் ராணா பிரதாப் என்ற இந்து நபர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த மூன்று வாரங்களில் இது ஐந்தாவது இந்து படுகொலையாகும், இது சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது.

வங்கதேத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, திங்கள்கிழமை மாலை ஜஷோர் (Jashore) மாவட்டத்தில் இந்து ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சந்தையில் துப்பாக்கிச் சூடு

மணிப்பூரம் உபாசிலாவில் உள்ள கொப்பாலியா சந்தையில் மாலை 5:45 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் கேசவ்பூர் பகுதியைச் சேர்ந்த ராணா பிரதாப் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளார். பிடி கோபோர் (BD Khobor) என்ற நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார் என்றும் ஒரு ஐஸ்கட்டி தொழிற்சாலை நடத்தி வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

சந்தையில் அவர் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டது. இதில் பலத்த காயமடைந்த ராணா பிரதாப், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

3 வாரங்களில் 5 பேர் கொலை

கடந்த மூன்று வாரங்களில் மட்டும் வங்கதேசத்தில் ஐந்து இந்துக்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்:

1. தீபு சந்திர தாஸ்: கும்பல் வன்முறையில் அடித்துக் கொல்லப்பட்டார்.

2. அமிர்த மண்டல்: சமீபத்திய கலவரத்தின் போது உயிரிழந்தார்.

3. பஜேந்திர விஸ்வாஸ்: மைமன்சிங் மாவட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

4. கோகன் சந்திர தாஸ்: புத்தாண்டு தினத்தன்று கும்பலால் கத்தியால் குத்தப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டு உயிரிழந்தார்.

5. ராணா பிரதாப்: தற்போது ஜஷோர் மாவட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

காவல்துறை விசாரணை

இச்சம்பவம் குறித்து மணிப்பூரம் காவல் நிலைய அதிகாரி ராஜியுல்லா கான் கூறுகையில், "நாங்கள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன. தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்றார்.

வங்கதேசத்தில் நிலவும் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்த நாட்டுக்கு இப்போதைக்கு போகாதீங்க.. இந்திய‌ர்களே கவனம்.. மத்திய அரசு உஷார்!
மதுரோ கைதுக்கு பழிக்கு பழி..? அமெரிக்க துணை அதிபர் வீட்டில் துப்பாக்கிச் சூடு..!