ஹமாஸ் படையிடம் உள்ள 3 பெண் பிணையக்கைதிகள்.. வெளியான வீடியோ - அந்த பெண்கள் கொடுத்த தகவல் என்ன தெரியுமா?

By Ansgar RFirst Published Jan 26, 2024, 11:26 PM IST
Highlights

Israeli Women Hostages : பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ், கடந்த அக்டோபர் 7ம் தேதி நடந்த தாக்குதலுக்குப் பிறகு காஸாவில் மூன்று இஸ்ரேலியப் பெண்களை பிணைக் கைதிகளாக வைத்துள்ளதை காட்டும் வீடியோவை இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இன்று ஜனவரி 26ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியான அந்த ஐந்து நிமிட வீடியோவில் தோன்றிய பெண்களில் இருவர், தாங்கள் இஸ்ரேலிய வீரர்கள் என்றும், மூன்றாவது பெண் ஒரு சராசரி குடிமகள் என்றும் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர். உத்தியோகபூர்வ மற்றும் சமூக ஆதாரங்களைப் பயன்படுத்தி மூன்று பெண்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தாங்கள் கடந்த 107 நாள்களாக காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அந்த பெண்கள் கூறிய நிலையில், இந்த வீடியோ கடந்த ஞாயிற்றுக்கிழமை படமாக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. காஸாவில் இனப்படுகொலையை தடுக்க இஸ்ரேல் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும் என்று ஐ.நா.வின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய சிறிது நேரத்திலேயே இந்த வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு.. மாலத்தீவு அதிபருக்கு உள்நாட்டிலேயே வலுக்கும் எதிர்ப்பு..

கடந்த அக்டோபர் 7 தாக்குதலின் போது கடத்தப்பட்ட பணயக்கைதிகளை "உடனடி மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்க" நீதிமன்றம் அழைப்பு விடுத்தது. வரலாறு காணாத அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1,140 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள், அதிகாரப்பூர்வ இஸ்ரேலிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த கணக்கு வெளியிடப்பட்டுள்ளது. 

போராளிகள் சுமார் 250 பணயக்கைதிகளை கைப்பற்றினர் மற்றும் அவர்களில் 132 பேர் காஸாவில் இருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது, இதில் குறைந்தது 28 இறந்த கைதிகளின் உடல்களும் அடங்கும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

குறைந்தது 26,083 பாலஸ்தீனியர்கள், அவர்களில் 70 சதவீதம் பெண்கள், இளம் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர், காசா பகுதியில் இஸ்ரேலிய குண்டுவீச்சு மற்றும் தரைவழி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இப்படியொரு அம்மாவா! காதலனுடன் ஓடிய தாய்.. 9 வயது சிறுவனின் சோக கதை..!!

click me!