ரஷ்யாவில் துப்பாக்கியில் இருந்து வெளியான நெருப்பினால் பற்றி எறிந்த ஓட்டல்; 15பேர்உயிரிழப்பு!!

Published : Nov 05, 2022, 03:46 PM ISTUpdated : Nov 05, 2022, 03:56 PM IST
ரஷ்யாவில் துப்பாக்கியில் இருந்து வெளியான நெருப்பினால் பற்றி எறிந்த ஓட்டல்; 15பேர்உயிரிழப்பு!!

சுருக்கம்

ரஷ்யாவின் கோஸ்ட்ரோமா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் காயமடைந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. 

இன்று அதிகாலை ஓட்டலில் ஏற்பட்ட தகராறின் போது ஒருவர் நெருப்பு வரும் துப்பாக்கியை பயன்படுத்தியதால் தீ விபத்து ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. 

மீட்புப் படையினர் ஓட்டலில் இருந்து 250 பேரை வெளியேற்றினர். கோஸ்ட்ரோமா பிராந்தியத்தின் ஆளுநர் செர்ஜி சிட்னிகோவ், 5 பேர் லேசான காயமடைந்து இருப்பதாகவும், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நெருப்பு பிழம்பு வரும் துப்பாக்கியை பயன்படுத்தியது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

ஓட்டலுக்கு குடிபோதையில் வந்திருந்த ஒருவர் கையில் துப்பாக்கி வைத்து இருந்துள்ளார். துப்பாக்கியை கையில் ஏந்தியவாறு தன்னுடன் வந்த பெண்ணுக்கு பூ கொடுக்குமாறு கேட்டுள்ளார். அத்துடன் கையில் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, நடன மேடைக்கு சென்று துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதுதான் ஓட்டலில் தீ விபத்து ஏற்படக் காரணம் என்று கூறப்படுகிறது.

மாஸ்கோவில் இருந்து 210 கி. மீட்டர் தொலைவில் ஆற்றங்கரை அருகே கோஸ்ட்ரோமா அமைந்துள்ளது. இங்கு 2.70 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டில் லாமே இரவு கேளிக்கை விடுதியில் நடந்த தீ விபத்தில் 150 பேர் உயிரிழந்து இருந்தனர். 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

உக்ரைன் போரில் தோற்றுவிட்டது.. ரஷ்யா தான் பலமான நாடு.. கடுப்பாகி கத்திய டிரம்ப்!
பெண் பத்திரிகையாளரைப் பார்த்து கண் அடித்த பாக். ராணுவ அதிகாரி! கிழித்துத் தொங்கவிடும் நெட்டிசன்கள்!