கிரிக்கெட் வீரரின் தந்தை மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

 
Published : May 25, 2018, 10:11 AM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
கிரிக்கெட் வீரரின் தந்தை மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

சுருக்கம்

father of srilankan cricketer dhananjaya de silva shot dead

இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்ஜெயா டி சில்வாவின் தந்தையை நேற்றிரவு மர்ம நபர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இலங்கை அணி வீரர் தனஞ்ஜெயா டி சில்வா 26 வயதுடைய இளம் வீரர். இவரது தந்தை ரஞ்சன். அரசியல்வாதியான இவர், ஏற்கனவே ராஜ்யசபா எம்பியாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் கொழும்புவின் புறநகர்ப் பகுதியான ரத்மலானா பகுதியில் ரஞ்சனை மர்ம நபர்கள் சுட்டு கொலை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் வீரரின் தந்தையும் அரசியல்வாதியுமான ரஞ்சனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கலந்துகொள்ள இருந்த தனஞ்ஜெயா டி சில்வா, அவரது தந்தை கொலை செய்யப்பட்டதால், அந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!
ஜப்பானை மீண்டும் உலுக்கிய நிலநடுக்கம்! சிறிது நேரத்தில் விலகிய சுனாமி எச்சரிக்கை!