
சீன பொருட்கள் இறக்குமதியை தடுக்க வேண்டும் என இந்தியர்களால் குரைக்க மட்டுமே முடியும் என சீன அரசு பத்திரிகை கூறியுள்ளதற்கு இந்திய வர்த்தக கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீன பத்திரிகையின் கருத்து இந்தியர்களுக்கு பெரும் அவமதிப்பு என்றும் வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக சீன பொருட்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் வர்த்தக கூட்டமைப்பு கூறியுள்ளது.
தங்கள் பொருட்கள் இல்லாமல் இந்தியர்கள் தீபாவளி கொண்டாட முடியாது என சீனர்கள் கருதுவது இதன் மூலம் தெரிவதாக கூட்டமைப்பின் தலைவர் பிரவீன் கண்டேல்வால் தெரிவித்துள்ளார். சீன பொருட்கள் பயன்படுத்துவதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என சமூக ஊடகங்களில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை கேலி செய்யும் வகையில் சீன அரசு பத்திரிகை கருத்து தெரிவித்திருந்தது.