அமெரிக்காவுக்கு நாட்டையே விற்ற முனீர்..! மேனேஜராக மாறிய பிரதமர்..! காரி உமிழும் பாகிஸ்தான் எம்.பி..!

Published : Oct 01, 2025, 07:08 PM IST
Pakistan

சுருக்கம்

முனீர் அமெரிக்காவுக்கு எதையோ விற்கும் விற்பனையாளராகத் தோன்றுகிறார். அதே நேரத்தில் மேலாளராக மாறி பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இது அரசியலமைப்பு, நாட்டை கேலி செய்வது. பாகிஸ்தானில் ஜனநாயகம் இல்லை. இது சர்வாதிகாரம். 

பாகிஸ்தான் ராணுவத் தலைவர் பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் அமெரிக்காவிற்கு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் எம்.பி.க்கள் அவரை விற்பனையாளர் என்று கூறுகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு முனீர் எந்தத் தகுதியில் அரிய பூமி கனிமங்களை பரிசாக வழங்கினா? என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். டிரம்ப் ஒரு பிரீஃப்கேஸில் சில கலர் கலரான கல் துண்டுகளைக் காட்டும் புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை தொடங்கியது. இந்த துண்டுகள் பாகிஸ்தானில் காணப்படும் அரிய பூமி கனிமங்கள் என்றும், அதில் அமெரிக்கா ஆர்வம் காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளை மாளிகையில் அசிம் முனீர் சந்திப்பு, அவரது சமீபத்திய அமெரிக்க பயணம் குறித்து கடுமையான கவலை தெரிவித்த பாகிஸ்தான் செனட்டர் ஐமல் வாலி கான் சபையில், "எந்தத் தகுதியில், எந்த அடிப்படையில் நமது ராணுவத் தலைவர் அசிம் முனீர் அமெரிக்க அதிபருக்கு அரிய பூமி கனிமங்களை பரிசாக வழங்கினார்? முனீர் அமெரிக்காவுக்கு எதையோ விற்கும் விற்பனையாளராகத் தோன்றுகிறார். அதே நேரத்தில் மேலாளர் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

முனீர் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து ராஜதந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார். இது அரசியலமைப்பு மற்றும் நாட்டை கேலி செய்வது. பாகிஸ்தானில் ஜனநாயகம் இல்லை. இது சர்வாதிகாரம். இது நாடாளுமன்றத்தை அவமதிப்பது. பாகிஸ்தான்-சவுதி பாதுகாப்பு ஒப்பந்தம், டிரம்பின் காசா அமைதித் திட்டத்திற்கு பாகிஸ்தான் அளித்த ஆதரவு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான முனீர் சந்திப்பு குறித்து விளக்கம் அளிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தை வேண்டும்’’ எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளை மாளிகை பகிர்ந்து கொண்ட புகைப்படத்தில், டிரம்ப் அந்தப் பெட்டியைப் பார்க்கும்போது முனீர் அரிய தாதுக்கள் அடங்கிய மரப் பெட்டியை வழங்குகிறார். ஷாபாஸ் ஷெரீப்பும் அங்கு சிரித்தபடி நிற்பதைக் காண முடிந்தது. அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகெங்கிலும் உள்ள மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேர்மையான முயற்சிகளுக்கு டிரம்பை ‘அமைதியின் மனிதர்’ என்று ஷெரீப் வர்ணித்தார். டிரம்பின் தலைமையின் கீழ், பாகிஸ்தான்-அமெரிக்க கூட்டாண்மை இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக மேலும் வலுப்பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியாவின் எதிரி..! இனி ரஷ்யாவின் எதிரி.. இனி எவனும் வாலாட்ட முடியாது.. வேற லெவல்
Putin in India: புதினுக்கு பகவத் கீதையை பரிசாக வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி