முஸ்லிம்களை காட்டிக் கொடுத்த அசிம் முனீர்..! காசாவிற்கு ராணுவத்தை அனுப்பியதால் சிக்கலில் பாகிஸ்தான்..!

Published : Feb 20, 2026, 11:37 PM IST
saudi turkey pakistan join trump peace board gaza conflict mission

சுருக்கம்

நீங்கள் வெறும் வீரர்கள் அல்ல; இஸ்லாம், கௌரவம் மற்றும் நீதியைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஒப்படைத்துள்ள முஸ்லிம் தேசமான பாகிஸ்தானின் துடிக்கும் இதயம் நீங்கள்.

காசாவிற்கு படைகளை அனுப்பியதற்காக பாகிஸ்தான் இராணுவத்தில் கிளர்ச்சி வெடிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ராணுவ முன்னாள் வீரர்கள், ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிருக்கு எதிராக கொநந்தளிக்கத் தொடங்கி உள்ளனர். முன்னாள் வீரர்கள், முன்னாள் வீரர்கள் அமைப்பான பாகிஸ்தான் படைவீரர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு பிரளயட்தை ஏற்படுத்தி உள்ளது. காசாவிற்கு படைகளை அனுப்பும் அசிம் முனிரின் முடிவுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய அழைப்பு விடுக்கிறது. பாகிஸ்தான் அரசு முஸ்லிம் உம்மத்தை காட்டிக் கொடுத்ததாகவும் செய்திக்குறிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த செய்திக்குறிப்பில், "பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளே, வீரர்களே! தியாகிகளின் இரத்தத்தாலும், காயிதே ஆசம் முகமது அலி ஜின்னாவின் அசைக்க முடியாத விருப்பத்தாலும் கட்டப்பட்ட இந்தப் புனித நிலத்தின் பாதுகாவலர்கள் நீங்கள். நீங்கள் வெறும் வீரர்கள் அல்ல; இஸ்லாம், கௌரவம் மற்றும் நீதியைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஒப்படைத்துள்ள முஸ்லிம் தேசமான பாகிஸ்தானின் துடிக்கும் இதயம் நீங்கள்.

பாகிஸ்தான் ராணுவத்தில் கலகம்?

"இன்றும், உங்கள் முன் ஒரு பெரிய ஏமாற்று வேலை நடந்து கொண்டிருக்கிறது. காசாவிற்கான டிரம்பின் அமைதி வாரியம் என்று அழைக்கப்படுவதில் பாகிஸ்தான் தலைமை, நிறுவனங்களின் நேரடி அல்லது மறைமுக பங்கேற்பு உள்ளது. இந்த வாரியத்தில் யூதர்கள் (சியோனிஸ்டுகள்) கிறிஸ்தவர்கள் உள்ளனர். அவர்கள் அல்-குத்ஸின் ஆக்கிரமிப்பாளர்களை நியாயப்படுத்தி அவர்கள் நிற்கிறார்கள். அதே நேரத்தில் ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களின் உண்மையான குரல் விலக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம், யூத வடிவமைப்புகளால் பிறந்த இந்த நிறுவனத்தில் பாகிஸ்தான் பங்கேற்பது இஸ்லாத்தின் எதிரிகளுடன் கைகோர்ப்பதற்கு சமம். உங்கள் பங்களிப்பை பாகிஸ்தான், முஸ்லிம் உம்மா மறக்கவோ மன்னிக்கவோ மாட்டாது.

எங்கள் தாய் நிறுவனத்திற்கு நாங்கள் கடுமையான, தெளிவான, உறைய வைக்கும் எச்சரிக்கையை விடுக்கிறோம். இந்த கூட்டணியை உடனடியாகவும், நிபந்தனையின்றியும் நிராகரிக்க வேண்டும். உங்கள் புனித சீருடை, உங்கள் ஆயுதங்கள், உங்கள் இரத்தம், உங்கள் மௌனத்தை கூட இந்த துரோக வாரியத்திடம் ஒப்படைக்காதீர்கள். காயிதே-அசாமின் நித்திய கோரிக்கையை கடைபிடியுங்கள். மேற்கத்திய- யூத திட்டங்களின் கைப்பாவையாக இல்லாமல், முஸ்லிம் கௌரவம், இறையாண்மை, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களின் சுதந்திரத்திற்காக சமரசமின்றி பாகிஸ்தான் நிற்கும்.

இந்த அழுத்தத்திற்கு பாகிஸ்தான் இராணுவம் அடிபணிந்து, இந்த இஸ்லாமிய எதிர்ப்பு மன்றத்தில் யூதர்கள், கிறிஸ்தவர்களுடன் கைகோர்த்தால், தேசம் உங்களை மறக்கவோ கட்டுப்படுத்தவோ மாட்டாது. ஒவ்வொரு வீரர்களின் மனதிலும் மிகவும் வேதனையான கேள்வி எழும். அல்-அக்ஸா மசூதியை ஒடுக்குபவர்களின் நோக்கங்களை நிறைவேற்றும்போது ஒரு உண்மையான முஸ்லிம் எவ்வாறு தியாகத்தை அடைய முடியும்?

முஸ்லிம் உம்மத்தை காட்டிக் கொடுத்த அசிம் முனீர்

முன்னாள் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் "உங்கள் நம்பிக்கையின் அடித்தளமே உடைந்து விடும். ஏனெனில் அல்லாஹ் குர்ஆனில் கட்டளையிடுகிறான். "ஓ விசுவாசிகளே, யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் உண்மையிலேயே ஒருவருக்கொருவர் நண்பர்கள். (சூரா அல்-மைதா 5:51). அல்லாஹ்வின் தெளிவான கட்டளைகளுக்கு முரணான மனித கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது அவரது படைப்பாளருக்கு எதிரான கிளர்ச்சியாகும். மன உறுதி கடுமையாக சிதைக்கப்படும். முகாம்கள், அகழிகள் மற்றும் வீடுகள் வழியாக விரக்தி காட்டுத்தீ போல பரவும்.

விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும்

ஆழ்ந்த கோபம், உள் பிளவுகள், ஒழுக்கமின்மை மற்றும் கிளர்ச்சி. இது பாகிஸ்தானுக்கு எதிரான கிளர்ச்சியிலிருந்து எழாது, மாறாக மனிதனின் தீய கட்டளைகளுக்கு அல்லாஹ்வின் கட்டளைகள் கண்டிப்பாகக் கீழ்ப்படிவதிலிருந்து எழும்.

செல்வமோ, பதவியோ உங்களுக்குப் பயனளிக்காத நாளில் நீங்கள் அல்லாஹ்வின் முன் கணக்குக் கொடுக்க வேண்டும். தாமதமாகிவிடும் முன் இந்தப் பாதையிலிருந்து மனந்திரும்புங்கள். அமைதி வாரியத்திலிருந்து விலகிச் செல்லுங்கள். யூதப் படைகள், அவர்களின் கூட்டாளிகளுக்கு எந்த அங்கீகாரமும் இல்லை, கூட்டணியும் இல்லை, ஒத்துழைப்பும் இல்லை. புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள். வரலாற்றின் கோபத்தையும், உங்கள் வீரர்களின் அதிருப்தியையும், அல்-ரஹ்மானின் கோபத்தையும் எதிர்கொள்ளுங்கள்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்களை நிறுத்துவது குறித்து பாகிஸ்தான் இராணுவத்திற்குள் பரவலான கோபம் ஏற்பட்டுள்ளது. காசாவிற்கு பல மூத்த இராணுவ அதிகாரிகள் அரசுக்கும், இராணுவத் தலைவருக்கும் எதிராகத் திரும்பியுள்ளனர். முன்னாள் இராணுவ அதிகாரிகள் இப்போது வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர். இவை ஆரம்பகால கிளர்ச்சியின் அறிகுறிகள். ஷாபாஸ் ஷெரீப் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். வீரகளை அனுப்புவதற்கு முன்பு டொனால்ட் டிரம்பிடம் பாகிஸ்தான் தாமதம் கோரியுள்ளது. ஷாபாஸ் ஷெரீப் உள்நாட்டு காரணங்களை மேற்கோள் காட்டியிருக்கலாம். உளவுத்துறை தகவல்படி வீரர்களைஅனுப்ப முடிவு எடுக்கப்பட்டு, உண்மையில் வீரர்கள் நிறுத்தப்பட்டால், பல பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளும் முன்னாள் அதிகாரிகளும் வெளிப்படையாகக் கிளர்ச்சி செய்யக்கூடும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாகிஸ்தான் வீரர்களின் உயிரைக் காப்பாற்ற 3 நாட்கள் கெடு..! முனீரின் பொய்களை அம்பலப்படுத்திய BLA-வின் புதிய வீடியோ
உலக AI மேடையில் இந்தியா.. பிரதமர் மோடி கொடுத்த நம்பிக்கை