சீனாவுக்குப் போன இந்திய சிற்பம்! கண்கவரும் 7ஆம் நூற்றாண்டு கலை பொக்கிஷம்!

Published : Nov 04, 2025, 04:20 PM IST
China National Museum Exhibition

சுருக்கம்

பல நூற்றாண்டுகள் பழமையான இந்திய தந்தச் சிற்பம் ஒன்று சீன தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது 7ஆம் நூற்றாண்டில் சீனத் துறவி சுவான்சாங்கிற்குப் பரிசாக வழங்கப்பட்ட இந்தச் சிற்பம்.

இந்தியா - சீனா இடையேயான இடையேயான உறவுகள் மெதுவாக சீரடைந்து வரும் சூழலில், பல நூற்றாண்டுகள் பழமையான இந்திய தந்தச் சிற்பம் ஒன்று, சீன தேசிய அருங்காட்சியகம் நடத்திய சமீபத்திய கண்காட்சியில் முக்கிய இடத்தைப் இடம்பெற்றுள்ளது.

புத்தரின் வாழ்க்கை நிகழ்வுகளைச் சித்தரிக்கும் இந்த அற்புதச் சிற்பம் "சீனாவின் தேசிய அருங்காட்சியகத்தில் ஜொலிக்கும் அறியப்படாத ரத்தினம்" என்று இந்தியாவிற்கான சீனத் தூதர் சூ ஃபெய்ஹாங் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

7ஆம் நூற்றாண்டில் சீனாவிற்குக் வந்த பொக்கிஷம்

சீனத் தூதர் சூ ஃபெய்ஹாங் பகிர்ந்த வரலாற்றுப் பதிவுகளின்படி, இந்த நேர்த்தியான தந்தச் சிற்பம், ஒரு இந்திய அரசரால், புகழ்பெற்ற சீனத் துறவி சுவான்சாங்-கிற்குப் பரிசாக வழங்கப்பட்டது.

இந்தியாவின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவரும், தனது காலத்தில் மிகவும் போற்றப்பட்ட சீன அறிஞர்களில் ஒருவருமான சுவான்சாங், பௌத்த போதனைகளைத் தேடி இந்தியா முழுவதும் விரிவான பயணங்களை மேற்கொண்டவர்.

சுவான்சாங், 7ஆம் நூற்றாண்டில் இந்தச் சிற்பத்தை சீனாவுக்கு எடுத்துச் சென்றார். அவரது எழுத்துக்கள் கிழக்கு ஆசியாவில் பௌத்த தத்துவத்தைப் பரப்புவதற்கு உதவியதுடன், இந்தியாவை ஒரு புனிதமான மற்றும் அறிவார்ந்த தேசமாகச் சீனா கருதுவதற்கும் அடித்தளமிட்டன.

மீண்டும் சீனாவுக்கு நேரடி விமானங்கள் இயக்கம்

இந்தியா - சீனா இடையேயான இந்த கலாச்சாரப் பரிமாற்றம், இரு அண்டை நாடுகளுக்கிடையே படிப்படியாக இயல்பு நிலை திரும்புவதைக் குறிக்கும் வேளையில் வந்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நேரடி விமானங்கள் அக்டோபரில் அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

ஷாங்காய்-புது டெல்லி இடையேயான விமான சேவை நவம்பர் 9 முதல் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்பட உள்ளது.

2020 கால்வான் பள்ளத்தாக்கு மோதல் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையேயான விமான சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்தியா - சீனா உறவில் மாற்றம்

2020-ம் ஆண்டு மோதலைத் தொடர்ந்து புது டெல்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையேயான உறவுகள் நீண்ட காலமாகப் பதட்டத்துடனேயே இருந்தன. எனினும், கடந்த 2024 அக்டோபரில் ஒரு முக்கிய உடன்பாடு எட்டப்பட்ட பிறகு உறவில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (LAC) நெடுகிலும் ரோந்து ஏற்பாடுகள் குறித்து இருதரப்பும் ஒருமித்த கருத்தை எட்டியபோது இந்த உறவு மேம்பாடு தொடங்கியது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இந்தியக் கலைப் பொருள் மூலம், இரு நாடுகளும் மீண்டும் மக்கள் மற்றும் கலாச்சார ரீதியான தொடர்புகளை வலுப்படுத்த முனைவது, ஆசியப் பிராந்தியத்தில் நல்லெண்ணத்தையும், உறவுகளின் மேம்பாட்டையும் வளர்க்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு... பேருந்து கட்டணம் அதிகரிப்பு.. பொதுமக்கள் ஷாக்!
Summer Travel: பழங்கால இன்ஜினியரிங்கின் உச்சம்! உலகின் டாப் சுற்றுலாத் தலங்கள் இதோ.!