life-style
தர்பூசணியை வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைப்பார்கள். இப்படி செய்வதால் தர்பூசணியில் உள்ள சத்துக்கள் இழக்கப்பட வாய்ப்புள்ளது.
தர்பூசணி சாப்பிட்ட உடனே பால் குடிக்க கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால் வாயு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.
நம்மில் பலர் தர்பூசணியில் உப்பு தூவி சாப்பிடுவார்கள். இது நல்லது கிடையாது. இப்படி செய்தால் தர்பூசணியில் உள்ள சத்துக்கள் குறைவதோடு, இரத்த அழுத்தம் வர வாய்ப்பு அதிகரிக்கிறது.
தர்பூசணி சாப்பிட்ட உடனே அதிக புரதம் உள்ள இறைச்சி, மீன் போன்றவற்றை சாப்பிட கூடாது. இவற்றால் செரிமானம் குறைந்து வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.
தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் இரவில் தூங்கும் முன் தர்பூசணி சாப்பிட்டால் தூக்கம் கெடும்.
தர்பூசணி சாப்பிட்ட உடனே முட்டை சாப்பிட கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். முட்டையில் உள்ள ஒமேகா3, தர்பூசணியில் உள்ள நீர் சேர்ந்து செரிமான பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.