சில்லுகளைப் பொறுக்கி எடுத்து கட்சி நடத்தும் விஜய் Uncle..! எங்களுக்கு சவால் விடலாமா? அதிமுக அட்டாக்..!

Published : Feb 13, 2026, 05:52 PM IST
EPS vs Vijay

சுருக்கம்

‘’FDFS டிக்கெட்டெல்லாம் 2000 ரூபாய்-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா? அப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு 30 வருஷ கொள்ளை அனுபவம் இருக்கு தானே? கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க போங்க அங்கிள்’’

சேலத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், ‘‘அடுத்தவர்கள் ஆரம்பித்த கட்சியில் அட்ரஸாக உள்ளவர்களுக்கு ஒரு சவால். என்னைப்போல் சொந்தமாக கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் ஓட்டு உங்களால் வாங்க முடியுமா?'' என்று கூறி இருந்தார்.

இதற்கு பதிலளித்த அதிமுக, ‘‘நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle? அப்பா-வால சினிமா உள்ள வந்தீங்க... வந்த சினிமா வழியே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் ஆகியோரைப் பார்த்து காப்பி பேஸ்டு.. அரசியலில், அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் லெகஸியையை திருடி, காப்பி பேஸ்டு... இப்படி அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?

"தி.மு.க. எதில் எல்லாம் அவுட் ஆப் கண்ட்ரோல் என்பதை எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆணைக்கிணங்க நாமும் பதிவிட்டதைப் பார்த்து காப்பி அடித்து யாரோ எழுதிக் கொடுத்ததை, "ஆக்‌ஷன்" என்று சொன்னதும் அடி மாறாமல் ஒப்பித்துள்ளார் பனையூர் பண்ணையார் நடிகர் விஜய். சொந்தமாக ஒரு வரியையே பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைப் பற்றி கேள்வி கேட்கலாமா?

கோவில் வாசலில் உடைக்கப்படும் தேங்காய் சில்லுகளைப் பொறுக்கி எடுப்பது போல, மற்ற கட்சிகளில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டு கட்சி என்ற பெயரில் ஒரு வாட்ஸப் குழுவை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள், "அடுத்த கட்சிகளை கலைத்து விட்டு வாருங்கள்" என்று சவால் விடுவது சிரிப்பாக உள்ளது. உங்களுக்கு அரசியல் புரிதலோ, வரலாறோ இல்லை என்பதற்காக எங்கள் இயக்கத்தின் தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுத் திரிபவர் தானே நீங்கள்?

எங்கள் பெரியாரின் பெயரில், எங்கள் அண்ணாவின் பெயரில், எங்கள் புரட்சித் தலைவரின் பெயரில் சவாரி செய்வதை நீங்கள் நிறுத்துங்களேன் பார்ப்போம்! எங்கள் முழக்கம் இன்றும் "அண்ணா நாமம் வாழ்க!" தான்! நாங்கள் என்றென்றும் புரட்சித் தலைவரின் "இரத்தத்தின் இரத்தமான" உடன்பிறப்புகள் தான்! நாங்கள் இன்றும், என்றும் முன்நிறுத்துவது எங்கள் இதயதெய்வம் "அம்மாவின் ஆட்சி"யைத் தான்!

"அம்மாவின் ஆட்சி அமைய அணிலாய்" இருந்ததாக சொல்லிய உங்களை, மிகப்பெரிய துயரத்தின் போது, 41 பேர் மரித்த போது பேசக்கூடாது என்ற "அம்மா கற்றுத் தந்த" அரசியல் பண்போடு தான் எடப்பாடி பழனிசாமி நாகரிகத்தோடு நடந்துகொண்டார். அப்புறம் பனையூர் பண்ணையாரே... இந்த FDFS டிக்கெட்டெல்லாம் 2000 ரூபாய்-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா? அப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு 30 வருஷ கொள்ளை அனுபவம் இருக்கு தானே? கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க போங்க அங்கிள்’’ எனக் கூறியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Power Cut: தமிழகத்தில் முக்கிய இடங்களில் இன்று (23-06-2026) 5 முதல் 8 மணி நேரம் மின்தடை! எந்தெந்த ஏரியாக்களில் எத்தனை மணிநேரம்?
அனல் பறந்த 2026 சட்டமன்றம் | முதலமைச்சர் விஜய்-ன் அறிவிப்புகளை ஆதாரங்களுடன் துவம்சம் செய்த உதயநிதி !