படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்களுக்கு, 7 நாட்களுக்குள் கல்வி கட்டணம் திரும்ப கொடுக்க கல்லூரிகளுக்கு உத்தரவு...

Asianet News Tamil  
Published : Mar 29, 2017, 02:37 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்களுக்கு, 7 நாட்களுக்குள்  கல்வி கட்டணம்  திரும்ப கொடுக்க கல்லூரிகளுக்கு உத்தரவு...

சுருக்கம்

who are all discontinuing the education inbeween they can get the amount

பல மாணவர்கள் சில பல காரணங்களால், தங்களது படிப்பை பாதியிலேயே  விட்டுவிடும் நிலை  ஏற்படுகிறது.  இந்நிலையில் அவர்களது படிப்புக்காக  செலுத்தப்பட்ட கட்டணத்தை, 7 நாட்களுக்குள் திருப்பி அளிக்க வேண்டும் என  உத்தரவு  பிறப்பிக்கப் பட்டுள்ளது .

அதன் படி,  பொறியியல் கல்லூரியில் படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை 7 நாட்களுக்குள், மாணவர்கள்  திரும்ப பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும்,  மாணவர்கள் கல்லூரிக்கு வந்த நாட்களை கணக்கிட்டு மீதி கட்டணத்தை திருப்பி அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வகுப்புகள் தொடங்கும் முன்னரே கல்லூரியை விட்டு சென்றால் ரூ.1000 மட்டும் பிடித்தம் செய்து, மீதி கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், உத்தரவை மீறும் கல்லூரிகளுக்கு இருமடங்கு அபராதம் அல்லது உரிமம் ரத்து என எச்சரிக்கையும்  விடுக்கப்பட்டுள்ளதாக  செய்திகள் வெளியாகி உள்ளது .

 

PREV
click me!

Recommended Stories

க.காதலுக்காக தாலி கட்டிய கணவனை கொன்ற மனைவி.. எப்படி தெரியுமா? கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு!
தொகுதி வரையறை தோல்விக்கு எடப்பாடி வருத்தப்படுகிறார்..... இது பச்சை துரோகம் ! எம்பி கனிமொழி பேட்டி