உஷார்..! அடுத்த 4 நாட்களுக்கு மழை.. இந்த மாவட்டங்களில் இன்று கனமழை.. !

Published : Apr 16, 2022, 02:28 PM IST
உஷார்..! அடுத்த 4 நாட்களுக்கு மழை.. இந்த மாவட்டங்களில் இன்று கனமழை.. !

சுருக்கம்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சதீவு பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌
மேல்‌ நிலவும்‌ மேலடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்ப சலனம்‌ காரணமாக,

16.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஒரு சில ‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை
பெய்யக்கூடும்‌. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

17.04.2022, 18.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

19.04.2022: தென்‌ தமிழகம்‌ , மேற்கு தொடர்ச்ச மலை பகுதி மாவட்டங்கள்‌, ஈரோடு, தருமபுரி, சேலம்‌, நாமக்கல்‌ மற்றும்‌ கரூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

20.04.2022: கடலோர தமிழகம்‌, மேற்கு தொடர்ச்ச மலை பகுதி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேோரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை : ஏதுமில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!