'உங்க கனவ சொல்லுங்க'.. திமுக அரசின் புதிய திட்டம்.. வீடு தேடி வரும் தன்னார்வலர்கள்.. முழு விவரம்!

Published : Jan 08, 2026, 09:00 PM IST
Mk Stalin

சுருக்கம்

தமிழக அரசின் "உங்க கனவ சொல்லுங்க" எனும் புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழக அரசின் "உங்க கனவ சொல்லுங்க" எனும் புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜனவரி 9) திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பாடியநல்லூரில் தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் அமைச்சர்களால் நாளையே தொடங்கி வைக்கப்படும்.

உங்க கனவ சொல்லுங்க திட்டம்

திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்வதே "உங்க கனவ சொல்லுங்க" என்ற திட்டமாகும்.

1.91 கோடி குடும்பங்கள்

இந்த திட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1.91 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களை சந்தித்து, அவர்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகளை 50,000 தன்னார்வலர்களை ஈடுபடுத்தி கண்டறிய எடுக்கப்படும் முன் மாதிரி முயற்சியாகும். இந்த களப்பணி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும்.

வீடு தேடி வரும் தன்னார்வலர்கள்

இப்பணிக்காக மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த சுமார் 50,000 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேற்கொள்ள உரிய பயிற்சி உறுப்பினர்கள் தன்னார்வலர்களாக இவர்களுக்கு இப்பணிகளை மேற்கொள்ள உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை (TNeGA) மூலம் தனியாக கைபேசி செயலி இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்

இத்திட்டத்தின் செயலாக்கம் குறித்த விவரங்கள் அனைத்து ஊரகம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளிலும், நாளிதழ்கள், சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் முன்கூட்டியே முறையாக விளம்பரப்படுத்தப்பட்டு, விழிப்புணர்வு பணிகளை செய்தி மக்கள் தொடர்புத் துறை ஒருங்கிணைக்கும்.

தன்னார்வலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு முறை செல்வர். முதல் முறை வீட்டிற்கு செல்லும் போது விண்ணப்ப படிவத்தினை குடும்பத் தலைவர் / உறுப்பினரிடம் வழங்குவர். அவ்விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு திட்டங்களின் பெயர் பட்டியல் விவரங்களை அவர்களிடம் தெரிவித்து, படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி கோருவர்.

அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டை

தன்னார்வலர்கள், இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சரிபார்த்து கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வர். கைபேசி செயலியில் பதிவேற்றியப் பின்னர் அக்குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையினை வழங்குவர். இந்த அட்டை மூலம் www.uks.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கனவு / கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரண்டு குழந்தைகளின் தந்தையுடன் 22 வயது மருத்துவ மாணவி காதல்.. அப்பார்ட்மென்ட்டில் வர்ஷினி இருந்த கோலம்.!
சென்னையன்ஸ் ரெடியா? புத்தக கண்காட்சி தொடக்கம்.. டிக்கெட் ப்ரீ.. இவ்வளவு தள்ளுபடியா? முழு விவரம்!