
சென்னையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் : தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக்கொண்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல நீண்ட நேரம் ஆகிறது. மேலும் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐடி நிறுவனங்கள் அதிகமாக உள்ள பகுதியாக தரமணி உள்ளது. இந்த பகுதிகளுக்கு முன்பாக வாகன நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை போக்குவரத்து போலீசார் இன்று முதல் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தவுள்ளனர்.
ஆளுநர் மாளிகை அமைந்திருக்கக் கூடிய சர்தார் பட்டேல் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,சென்னை போக்குவரத்து காவல்துறை சர்தார் பட்டேல் சாலையில் செய்யப்பட உள்ள போக்குவரத்து மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் காந்தி மண்டபம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக, போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டு, 21.05.2025 (புதன்கிழமை) இன்று முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.