IPSக்கும் கலெக்டர்க்கும் கல்யாணம்...10 சவரன் குறைந்ததால் மாப்ள எஸ்கேப்... ஆபாச படம் எடுத்த சென்னை வாலிபர்!

First Published Jan 23, 2018, 5:49 PM IST
Highlights
today Special bit news


ஐபிஎஸ் அதிகாரியை காதலித்து திருமணம் செய்யவிருக்கும் பெண் கலெக்டர்...


மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் பெண் கலெக்டருக்கும் டெல்லியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த கட்டிட பொறியியல் பட்டதாரியான ஆம்ரபாலி சென்னை ஐஐடியில் படித்தார்.

அதன்பிறகு கடந்த 2009-ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி அடைந்து தெலங்கானா மாநிலத்திலன் வாரங்கல் மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டராக நியமிக்கப்பட்ட வாரங்கல் மாவட்டத்தின் ஆட்சியரான அமர்பாலியும்  டெல்லியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சமீர் ஷர்மாவும் காதலித்து வந்தனர்.

சமீர் ஷர்மா  டாமன் டையூ பகுதியில் எஸ்.பி யாக பணியாற்றி வருகிறார்.

இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் ஒப்புக்கொண்ட நிலையில் வரும் பிப்ரவரி 18-ம் தேதி, இவர்களது திருமணம் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற உள்ளது.

50 சவரனில் 10 சவரன் குறைந்ததால் தாலி கட்டும் நேரத்தில் எஸ்கேப் ஆன மணமகன்.

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகரில் வசித்து வரும் ஜானகிராமனின் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், மணமகன் வீட்டார் 50 சவரன் நகை, மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரதட்சணையாக கேட்டுள்ளனர்.

இதனை கொடுக்க மணமகள் வீட்டார் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், நேற்று திருமணம் நடைபெறவிருந்த நிலையில் வரதட்சனையாக கேட்ட 50 சவரனில் 10 சவரனை பிறகு தருவதாக, மணமகன் வீட்டாரிடம் ஜானகிராமன் கூறியுள்ளார்.

இதனால் தாலி கட்டும் நேரத்தில் மணமகன் தலைமறைவாகினார்.  இதனையடுத்து மணமகன் வீட்டாரை, மணமகள் வீட்டார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமறைவான மணமகனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மணமகள் வீட்டாரும், பொதுமக்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

விளையாட்டு வீராங்கனையை ஆபாச படம் சென்னை வாலிபர் கைது!

சென்னையில் தற்போது தேசிய அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கூடைப்பந்து அணிகளின் வீராங்கனைகள் வந்துள்ளனர். இந்நிலையில் உத்தரகாண்ட் மகளிர் அணியினர் தங்கியிருந்த ஒரு ஓட்டலில் வாலிபர் ஒருவர் வீராங்கனைகள் குளிக்கும்போது ஆபாச படம் எடுத்ததாக புகார் கூறப்பட்டது. இந்த விஷயம் அறிந்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் அலாவுதீனை போலீசார் ஆஜர் செய்தனர்.

 

கல்யாணம் ஆகாத விரக்தியில் தற்கொலை ம்யன்ற வாலிபர்...

திருவான்மியூரில் பகுதியை சேர்ந்த சுந்தரத்தின் மகன் வசந்த். வயது அதிகமாக அதிகமாக திருமணத்திற்கு பெண் கிடைக்காததால், விரக்தியடைந்துள்ளார்.

இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9 மணிக்கு ஆ.கே.நகர் – ராயப்பேட்டை சாலை சந்திப்பில் உள்ள பாலத்திலிருந்து கீழே குதித்துள்ளார்.

இதில், சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது விழுந்துள்ளார். விழுந்த வேகத்தில் வசத்திற்கு தலை, கை, கால் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அருகிலுள்ள ராயப்பேட்டை அரசு பொது மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தனக்கு நீண்ட நாட்களாக பெண் கிடைக்காததால், திருமணம் ஆகாத விரக்தியில், தற்கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவித்துள்ளார்.

click me!