
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற விஜய், முதல் நாளே அதிரடி காட்டியிருக்கிறார். முந்தைய அரசின் நிதி கொள்கைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, மக்கள் நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், தனது முதல் பெரிய அரசாணையில் முதல் கையெழுத்திட்டார். அதாவது தகுதியுள்ள வீட்டு உபயோக நுகர்வோருக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.