மக்களே உஷார்.. அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்குமாம்.. வானிலை அலெர்ட்..!

By vinoth kumarFirst Published Mar 5, 2024, 2:09 PM IST
Highlights

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலை மிஞ்சும் அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 102.2 டிகிரி பாரன்ஹீட் தாண்டியுள்ளது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். 

தமிழகத்தில் வெப்பநிலை அடுத்த இரண்டு தினங்களுக்கு இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலை மிஞ்சும் அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 102.2 டிகிரி பாரன்ஹீட் தாண்டியுள்ளது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு இயல்பை விட வெயில் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Latest Videos

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:  05.03.2024 முதல் 11.03.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல 05.03.2024 மற்றும் 06.03.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். அதேநேரம் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!