வெயில் தாங்க முடியல... பள்ளி நேரத்தை மாத்துங்க.. அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை!!

Published : Apr 04, 2022, 07:54 PM IST
வெயில் தாங்க முடியல... பள்ளி நேரத்தை மாத்துங்க.. அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை!!

சுருக்கம்

தமிழகத்தில் வெயில் கொளுத்துவதால் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகத்தில் வெயில் கொளுத்துவதால் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை காலம் துவங்கியுள்ளது. இதை அடுத்து வெயில் கொளுத்தி வருகிறது. தற்போது தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு வெயில் இயல்பு நிலையில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ்  வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது அடிக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வரும் நிலையில் இன்னும் வெயில் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மக்களை மேலும் சோர்வடைய செய்துள்ளது.

இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி நேரத்தை காலை 7.30 மணியிலிருந்து 12.30க்கு மாற்றியமைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த காலங்களை காட்டிலும் வெயிலின் உக்கிரம் இந்த வருடம் ஆரம்பத்திலேயே கூடுதலாக உள்ளது. நாடு முழுதும் சுட்டெரிக்கும் வெயிலை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் இயங்கும் நேரம் சில மாநிலங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவில் பள்ளி நேரம் என்பது காலை 8 மணிக்கு தொடங்கி 11 மணிக்குள் நிறைவடைந்து விடுகிறது. அதேபோல கர்நாடகத்தில் தேர்வு வைத்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இப்போதே வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. எதிர்வரும் காலங்களில் வெயில் உச்சத்தைத் தொடும். வெயிலின் தாக்கத்தினால் பல்வேறு சரும நோய்கள், காய்ச்சலால் குழந்தைகளுக்கு சகஜத்தன்மை மாறுகின்றது. உடலும் உள்ளமும் ஒருசேர ஒழுங்காக இருந்தால் மட்டுமே கற்றலும் கற்பித்தலும்  சிறப்பாக நடக்கும். வெயிலின் கோரதாண்டவத்தை சமாளிக்கும் வகையில் மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளி நேரத்தை காலை 7.30 லிருந்து 12.30 வரை மாற்றியமைத்து மாணவர்களை பேணும்படி முதலமைச்சரை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மகளிர்களுக்கு இவ்வளவு திட்டங்களா.! கொத்து கொத்தாக அள்ளிக்கொடுத்த தமிழக அரசு.! குஷியில் பெண்கள்!
தவெகவுக்கு போட்டியாக மாஸ் காட்டும் திமுக..? 1.30 லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டம்..