வகுப்பறையிலேயே வைத்து பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி - ஆசிரியர் கைது

Asianet News Tamil  
Published : Oct 27, 2016, 03:43 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
வகுப்பறையிலேயே வைத்து பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி - ஆசிரியர் கைது

சுருக்கம்

திருவள்ளூரில் உள்ள பள்ளி ஒன்றில் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் சீனிவாசன் என்ற ஆசிரியர பணியாற்றி வருகிறார்.

கடந்த 20 ஆம் தேதி ஆசிரியர் சீனிவாசன், மாணவி கவிதாவை பொய்யான காரணம் ஒன்றை கூறி வகுப்பறையில் வெயிட் பண்ண சொல்லியிருக்கார். மாணவியும் ஆசிரியரின் பேச்சைக் கேட்டு இருந்துள்ளார். அப்போது ஆசிரியர், அந்த மாணவியை பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார். 

பலாத்காரத்தில் ஈடுபட்ட அந்த ஆசிரியர், இந்த சம்பவத்தை யாரிடமும் கூற வேண்டாம் என்றும் மிரட்டியுள்ளார். இந்த நிலையில் வீட்டுக்கு சென்ற மாணவி கவிதா மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பெற்றோர்.

மாணவியை பரிசோதித்த மருத்துவர், கவிதா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார் என்று கூறியதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து திருவள்ளூர காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரை அடுத்து, ஆசிரியர் சீனிவாசனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், அவ்வப்போது மாணவிகளிடம் வரம்பு மீறி நடந்து வந்துள்ளது தெரியவந்தது.

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெறாத ஒரு குடும்பம் கூட தமிழகத்தில் இல்லை.. மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்