“புகை மண்டலமாக” மாறிய சென்னை நகரம்  – “போகியும், பனியும் கலந்தது”

Asianet News Tamil  
Published : Jan 13, 2017, 09:16 AM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
“புகை மண்டலமாக” மாறிய சென்னை நகரம்  – “போகியும், பனியும் கலந்தது”

சுருக்கம்

பழையன கழிதலும் புதியன புகுதலும் என கூறும் போகி பண்டிகையான இன்று, அதிகாலையிலேயே ஏராளமான மக்கள், போகி கொளுத்தினர். பழைய பாய், துடைப்பம், முரம் உள்பட தேவையில்லாத பொருட்களை தீயிட்டு எரித்தனர். இதனால், இன்று காலை சுமார் 4 மணி முதல் சென்னை நகரம்  முழுவதும் கடும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

மேலும், மார்கழி மாத பனியும், கண்களை மறைத்தன. காலை 9 மணிவரை சாலையில் செல்லும் வாகனங்கள், முகப்பு விளக்கை எரிய வைத்தபடி சென்றனர். சாலை முழுவதும் கடும் புகை மற்றும் பனியால் எதிரே செல்லும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத நிலை உள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு அண்ணா மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து செல்லும் வாகனங்களுக்கு, பாலத்தின் மேல் பகுதியில் செல்லும் வாகனங்கள் தெரியவில்லை. இதனால், பார்க்கிங் விளக்குகளை போட்டு செல்கின்றனர். அதேபோல் பாலத்தில் இருந்து கீழே இறங்கும் வாகனங்களும், பொறுமையாகவே சென்றன.

PREV
click me!

Recommended Stories

இதைக்கூட செய்ய முடியலனா அப்புறம் எதுக்கு முதல்வர் பதவி..! ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!
இந்த இரண்டு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போகுதாம்! சென்னையின் நிலவரம் என்ன?