தமிழகத்திற்கு வரும் 7ம் தேதி ரெட் அலர்ட்!! கேரளாவைப்போல கொட்டித் தீர்க்குமா?

Published : Oct 04, 2018, 11:39 AM ISTUpdated : Oct 04, 2018, 11:56 AM IST
தமிழகத்திற்கு வரும் 7ம் தேதி ரெட் அலர்ட்!! கேரளாவைப்போல கொட்டித் தீர்க்குமா?

சுருக்கம்

தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.  தமிழத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்க்கும் என எச்சரித்துள்ளது.

தமிழகத்திற்கு வரும் 7ந் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரும் 7ந் தேதி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை 7ந் தேதி தமிழகத்தில் 25 செ.மீக்கு மேல் மழை பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவிற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், கனமழை கொட்டித் தீர்த்திருந்தது. ஆகஸ்ட் மாதம் கேரளாவிற்கு கொடுக்கப்பட்டது போல அக்டோர் 7ந் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மிக தீவிரமாக கனமழையை எதிர்பார்க்கும் போது ரெட் அலர்ட் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அக்டோபர் 7ந் தேதி அதிகனமழையை எதிர்கொள்ள தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தயார் நிலையில் உள்ளது. குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இந்த சமயத்தில், சாலை போக்குவரத்து பாதிப்பு, மின்சார துண்டிப்பு, என பல பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. அக்டோபர் 7ந் தேதி அதிகனமழையை எதிர்கொள்ள தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தயார் நிலையில் உள்ளது.

 

 

PREV
click me!

Recommended Stories

தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!
எக்கச்சக்க அம்சங்களோடு சென்னையை கலக்க வரும் 125 புது எலெக்ட்ரிக் பஸ்..! எந்தெந்த ஏரியாவுக்கு வரப்போது தெரியுமா?