தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை..! வானிலை ஆய்வு மையம் தகவல்..!

By thenmozhi gFirst Published Dec 24, 2018, 7:09 PM IST
Highlights

தென் தமிழகத்தில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் தென் மாவட்ட பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதேவேளையில் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பொறுத்தவரையில் அதிகபட்சமாக நாகை மாவட்டத்தில் 40 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!