விபத்தில்லா தீபாவளியைக் காெண்டாடுங்கள் : மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்

Asianet News Tamil  
Published : Oct 27, 2016, 01:05 AM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
விபத்தில்லா தீபாவளியைக் காெண்டாடுங்கள் : மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்

சுருக்கம்

125 டெசிபலுக்கும் மே‌ல் ஒலி ஒழுப்பக்கூடிய பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாாியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓலி மாசு மற்றும் புகையில்லாத தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற விதிமுறைகளை கடைபிடிக்காமல் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளை வாங்கக் கூடாது என பொது மக்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளை வெடிக்க‌க் கூடாது என்றும், விபத்துகள் ஏற்படாமல் தீபாவளியை கொண்டாடுவது குறித்து போதிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெறாத ஒரு குடும்பம் கூட தமிழகத்தில் இல்லை.. மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்