தமிழகத்தில் 48 மணி நேரத்தில் பலத்த புயல் – அந்தமானில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

Asianet News Tamil  
Published : Dec 07, 2016, 11:57 AM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
தமிழகத்தில் 48 மணி நேரத்தில் பலத்த புயல் – அந்தமானில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சுருக்கம்

அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.

விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 1,260 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.

இதனால் தமிழகத்தின் தெற்கு கடலோர பகுதிகளிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதையொட்டி 48 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஜோதிமணி மீது நடவடிக்கை பாயுமா? செல்வபெருந்தகையின் 'அடடே' விளக்கம்!
2026ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பெரும் மாற்றம் இருக்கும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி