நிரம்பி வழியிது மதுராந்தகம் ஏரி... சென்னை ஏரிகளின் நிலவரம் இதுதான்...

 
Published : Nov 08, 2017, 02:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
நிரம்பி வழியிது மதுராந்தகம் ஏரி... சென்னை ஏரிகளின் நிலவரம் இதுதான்...

சுருக்கம்

madhurandhagam lake full excess water released via canals

சென்னைக்கு அருகே உள்ள  பிரதான ஏரியான மதுராந்தகம் ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளது. ஏரி நிரம்பியதால் 100 கன அடி நீர் வீதம் தற்ஓது வெளியேற்றப்பட்டு வருகிறது .

மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டி விட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 23.3 அடியை நீர் எட்டிவிட்டது. ஏரியில் நீர் இருப்பு 686 மில்லியன் கன அடி ; நீர்வரத்து வினாடிக்கு 300 கன அடியாக உள்ளது. 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான 
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு - 35 அடி இதில் இப்போது நீர் இருப்பு - 23.90 அடி யாக உள்ளது. 

சென்னைக்கு அருகில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி. இதன் நீர்மட்டம் - 13.16 அடியாக உள்ளது. ஏரி இன்னும் நிரம்பவில்லை. இருப்பினும் இதன் நீர் வரத்தை அதிகாரிகள் கவனமாகக் கண்காணித்து வருகின்றனர்.  

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு - 21.20 அடி. தற்போது ஏரியின் நீர்மட்டம்  - 9.20 அடியாக உள்ளது. 

அதுபோல் இன்னொரு முக்கிய ஏரியான சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு - 18.86. இதன் நீர்மட்டம் - 11 அடியாக உள்ளது. இந்த வகையில், மதுராந்தகம் ஏரியைத் தவிர மற்ற ஏரிகள் எல்லாம் இன்னும் முக்கால் வாசிகூட நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு