‘2 நாட்களாக பொது மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை’ – பீதியில் வேலூர் மக்கள்

Asianet News Tamil  
Published : Oct 27, 2016, 02:49 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
‘2 நாட்களாக பொது மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை’ – பீதியில் வேலூர் மக்கள்

சுருக்கம்

வேலூர் அருகே 2 நாட்களாக பொது மக்களை அச்சுறுத்திவரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் மலை பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று நடமாடியுள்ளது.  

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனப்பகுதியில் 2 நாட்களாக பொது மக்களை அச்சுறுத்திவரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவைக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில், வனத்துறையினர் சிறுத்தைப்புலி நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனச்சரக அதிகாரி பரமசிவம் கூறும்போது,  

சிறுத்தைப்புலி மலை அடிவார பகுதிக்கு அவ்வப்போது வந்து செல்கிறது. அது ஊருக்குள் நுழையவில்லை. வனத்துறையினர் முகாமிட்டு அந்த சிறுத்தைப்புலியை கண்காணித்து கொண்டு தான் இருக்கிறோம் என்றும், பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்.! ஆட்சியர்கள் அதிரடி.! பேரதிர்ச்சியில் குடிமகன்கள்.!
ரெஸ்டே கொடுக்காத தொடர் மழை.. காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை