ஆசிரியை வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை... நகை, பணம் கொள்ளை - எப்படி தெரியுமா...!

Asianet News Tamil  
Published : Nov 15, 2017, 06:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
ஆசிரியை வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை... நகை, பணம் கொள்ளை - எப்படி தெரியுமா...!

சுருக்கம்

jewel and rupees theft in teachers home in thiruvarur district

திருவாரூர் அருகே அரசுப்பள்ளி ஆசிரியை வீட்டின் பின் பக்க கதவை உடைத்து 45 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருத்துறைப்பூண்டி அருகே எடையூரில் அரசு பள்ளி ஆசிரியையாக இருப்பவர் இந்திரா. இவர் தினமும் காலை 9 மணிக்கு பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை 4 மணியளவில் வீட்டிற்கு வருவார். 

இந்நிலையில், வழக்கம்போல் இன்றும் காலை 9 மணிக்கு பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை 5 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். 

அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 45 சரவன் நகையும் ரூ. 6 ஆயிரம் பணமும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து இந்திரா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலிலேயே மர்ம நபர்கள் இவ்வாறு கைவரிசை காட்டியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின், உதயநிதி உட்பட.. 34 அமைச்சர்களில் 31 பேர் பின்னடைவு.. கலங்கும் திமுகவினர்
போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் திமுக-வை பந்தாடும் விஜய்... அடேங்கப்பா இத்தனை ஓட்டு லீடிங்கா?