"மறு உத்தரவு வரும் வரை பணியிலேயே இருக்கவேண்டும்" - காவல் துறை அதிகாரிகளுக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவு

First Published Dec 5, 2016, 5:20 PM IST
Highlights


முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது. காவல்துறை அலர்ட் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகர கமிசனர் காவல் துறையினருக்கு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதில் அனைத்து காவல் துறை அதிகாரிகளும் கண்டிப்பாக பணியில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அனைத்து அதிகாரிகளும் மறு உத்தரவு வரும் வரை பணியில் இருக்க வேண்டும் என்றும், காவல் நிலையங்களில் தேவையான அளவு காவலர்கள் இருந்தால் போதும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புப் பணிகளில் திரு.சாரங்கன் மற்றும் திரு.ஜெயராமன் ஆகிய ஐஜி-க்கள் ஈடுபடுவார்கள் என்றும் அறிவித்துள்ளார்

click me!