விழுப்புரம் மாவட்டத்தில் வறட்சி பாதிப்பு - மத்திய குழுவினர் இன்று ஆய்வு

 
Published : Jan 25, 2017, 09:46 AM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
விழுப்புரம் மாவட்டத்தில் வறட்சி பாதிப்பு - மத்திய குழுவினர் இன்று ஆய்வு

சுருக்கம்

கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனது. இதனால், கடும், வறட்சி ஏற்பட்டு, விவசாய பயிர்கள் கருகி நாசமானது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, அதற்கான நிவாரண உதவிகளை வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதை தொடர்ந்து, மத்திய அரசிடம் இருந்து நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்காக, வறட்சி பாதித்த மாவட்டங்களில் மத்திய அரசு அதிகாரிகள் குழுவினர் தற்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.
வேலூர், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு அதிகாரிகள் குழுவினர், விழுப்புரம் மாவட்டத்தின் வறட்சி பாதித்த பகுதிகளை இன்று ஆய்வு செய்கின்றனர்.

பசுதா மிஸ்ரா தலைமையில் வரும் மத்திய குழுவினர், விழுப்புரம் அருகே உள்ள அரசூர் பகுதியில் காலை 11 மணிக்கு வறட்சி பாதித்த நிலங்களை பார்வையிடுகின்றனர்.

தொடர்ந்து, பேரங்கியூர், பிடாகம் பகுதியில் பயிர்களைப் பார்வையிடுகின்றனர். பிறகு, விக்கிரவாண்டி அருகே பனையபுரம் கிராமத்திலும், தொடர்ந்து திண்டிவனம் அருகே பேரணி கிராமத்திலும், வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிடுகின்றனர்.

இந்த ஆய்வின்போது, விழுப்புரம் மாவட்ட அதிகாரிகளும் உடன் இருந்து, வறட்சி பாதிப்புகள் குறித்து, மத்திய குழுவுக்கு விளக்கி தெரிவிப்பார்கள். அதன்பின்னர், கலெக்டர் எல்.சுப்பிரமணியன் மற்றும் துறை அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!
தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?