Alert : மக்களே அலெர்ட் !! நாளை உருவாகிறது ‘அசானி புயல்..’ வானிலை மையம் அப்டேட் !!

Published : Mar 20, 2022, 09:38 AM IST
Alert : மக்களே அலெர்ட் !! நாளை உருவாகிறது ‘அசானி புயல்..’ வானிலை மையம் அப்டேட் !!

சுருக்கம்

வங்கக் கடலில் உருவாகிறது அசானி புயல். இதனால்  அந்தமான் நிகோபர் தீவுகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் நிகோபர் தீவுகளை நோக்கி நகர்ந்து வருவதால்,அங்கு அதி கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக அங்கு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை புயலாகவும் வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த புயலுக்கு ‘அசானி’ என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், அசானி புயல் உருவாகவுள்ள நிலையில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால்,உடனடியாக கரை திரும்புமாறு மீனவர்களை, இந்திய கடலோர காவல்படை அறிவுறுத்தியுள்ளது.அந்த வகையில்,ஹெலிகாப்டர் மூலம் சென்று, நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

Dating: உலகிலேயே 'டேட்டிங்' செய்ய மிகக் குறைந்த செலவாகும் நகரம் டெல்லிதானா? என்னவெல்லாம் ஸ்பெஷல்?!
தரமான கல்வியையும், சுகாதாரமான குடிநீரையும் இலவசமாக வழங்கிட வேண்டும்.! ஜாகுவார் தங்கம் கோரிக்கை !