ஓசூரில் ரவுடி படுகொலை…. கடத்திச் சென்று 45 இடங்களில் சரிமாரியாக  குத்தி வீசிய கொடூரம் !!

 
Published : Jul 03, 2018, 06:00 AM ISTUpdated : Sep 19, 2018, 02:36 AM IST
ஓசூரில் ரவுடி படுகொலை…. கடத்திச் சென்று 45 இடங்களில் சரிமாரியாக  குத்தி வீசிய கொடூரம் !!

சுருக்கம்

Hosur rowdy mueder by another rowdy

ஓசூர் அருகே பிரபலமான ரவுடி ஜெயந்த்தை கட்த்திச் சென்ற மர்ம கும்பல் ஒன்று  அவரை சரமாரியாக குத்திக் கொன்று உடலை தோப்புக்குள் வீசிச் சென்ற கொடூரம் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியை அடுத்த  மாயசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் . அப்பகுதியில் பிரபல ரவுடியான  இவர் மீது கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. போலீசாரின் ரவுடி பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றிருந்தது.

ஜெயந்த்தைப் போன்றே அப்பகுதியில் பிரபலமாக இருப்பவர் அற்றொரு ரவுடி சுமில். இருவரும் நண்ர்களாக இருந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவர்களுக்குள் பண விவகாரத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் இருந்து வந்தது. ஆனால் சிலநாட்களில் அவர்கள் இருவரும் சமாதானம் ஆகிவிட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயந்த்தை சுனில் தரப்பினர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அத்திப்பள்ளி போலீசில் புகார் செய்தனர். அதில், சுனில் தரப்பினர் மீது புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் அத்திப்பள்ளி அருகே தமிழக - கர்நாடக மாநில எல்லையான ஜலட்டிகானப்பள்ளி என்ற இடத்தில் உள்ள தோப்பில் ஜெயந்த் பிணமாக கிடந்தார். அவரது உடலில் 45 இடங்களில் கத்திக்குத்துகள் விழுந்திருந்தன.

மேலும் கண்ணாடி பாட்டிலால் உடலில் குத்தப்பட்டும், கை, கால்கள் உள்பட பல இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டும் இருந்தன. இதைத் தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெங்களூரு விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஜெயந்த், சுனில் தரப்பினரிடைய ஏற்பட்ட மோதல் காரணமாக சுனில் கோஷ்டியினர் ஜெயந்த்தை காரில் கடத்தி சென்று கொன்று பின்னர், உடலை தோப்பில் வீசி சென்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் சுனில் உட்பட அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவை வைத்து தவெகவுக்கு ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்..! திமுகவை பேயடி அடித்த விஜய்..! சீக்ரெட் பின்னணி..!
அடிதூள்.. ஜனவரி 2ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கு விடுமுறை.. என்ன காரணம்?