முக்கிய ஆவணங்கள் சிக்கின... ஜார்ஜ் வீட்டில் 25 மணிநேர சோதனை நிறைவு!

By vinoth kumarFirst Published Sep 6, 2018, 9:41 AM IST
Highlights

கடந்த 2017ம் ஆண்டு ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாக செய்ததாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

குட்கா விவகாரம் தொடர்பாக ஜார்ஜ் வீட்டில்  25 மணிநேரம் நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாக செய்ததாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அவர் மீது குட்கா ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பின், அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். புதுக்கோட்டையில் இருக்கும் அவரது வீடு, கல் குவாரி, கல்லூரி உள்பட 35 இடங்களில் நடத்திய சோதனையில் ரூ.85 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகள் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இதன்பின்னர், குட்கா ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றி, டெல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையொட்டி கடந்த சனிக்கிழமை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னசாமியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, தமிழக அரசுப் பணியில் வேலை வாங்கி தருவதாக கூறி, அமைச்சர் விஜயபாஸ்கரும், அவரது உதவியாளர்களும் பணம் பெற்றதாக என வாக்குமூலம் அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்னர். இதைதொடர்ந்து, சென்னை மற்றும் புதுக்கோட்டையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், மற்றும் அவர்களது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையை தொடங்கியுள்ளனர். 

அதே நேரத்தில் முன்னாள் சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ் வீட்டிலும் சோதனை தொடர்ந்தது. குறிப்பாக தமிழக காவல்துறையில், முதல்முறையாக டிஜிபி வீடு உள்பட 40-க்கு மேற்பட்டோர் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ஏராளமான ஆவணங்கள், பல கோடி நகைகள், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

 

இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது  குறிப்பிடத்தக்கது. சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி ராஜேந்திரன் வீடு, விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடி உரிமையாளர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீடு ஆகிய இடங்களில் பரபரப்பு நிலவுவதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை முதல் மீண்டும் சிபிஐ அதிகாரிகளின் சோதனை தொடங்கியுள்ளது. இன்றும் பல்வேறு ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் சிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ் வீட்டில், டெல்லி சிபிஐ அதிகாரிகள் சுமார் 25 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். தைதொடர்ந்து இன்று காலை 2 பெரிய பைகளில் ஆவணங்களை எடுத்து சென்றனர். இதன் அறிக்கை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பித்தப் பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதற்கிடையில், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், தற்போது அமெரிக்காவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!