துப்பாக்கிச்சூடு விசாரணை நேர்மையாக சுதந்திரமாக நடைபெற வேண்டும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் இருதரப்பிலும் இருப்பதாகவும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். குட்கா வழக்கை போல் துப்பாக்கிச்சூடு வழக்கையும் ஏன் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கக்கூடாது என்று மீண்டும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். போலீஸார் மீது சந்தேகம் உள்ளபோது வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் என்ன தயக்கம் என நீதிபதி வினவியுள்ளார்.
துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு பற்றி விசாரிக்க தமிழக அரசே ஆணையம் அமைத்துள்ளது. மேலும் ஆணையத்தின் விசாரணை சரியான பாணியில் சென்று கொண்டிருப்பதாகவும் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். விசாரணையில் உண்மை வெளிவரும் என்று அரசு தலைமை வழக்கறிஞர் உறுதியளித்துள்ளார்.