ஓசூர் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து... 10 பேர் படுகாயம்..!

By vinoth kumarFirst Published Dec 20, 2018, 3:10 PM IST
Highlights

ஓசூர் அருகே அரசு பேருந்து மீது டெம்போ லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஓசூர் அருகே அரசு பேருந்து மீது டெம்போ லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து இன்று காலை 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து ஒன்று தருமபுரி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது சூளகிரி அருகே பேருந்து சென்றுக்கொண்டிருநத போது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து மீது அரசூர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!