அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தித்ய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வேதேச அளவில் பங்குசந்தையில் சரிவு உள்ளிட்ட காரணம் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் மற்றும் மும்பை பங்குச்சந்தை பெரும் சரிவை சந்தித்தால், தங்கத்தின் மீதான முதலீடு நேற்று அதிகமாக காணப்பட்டது.
அதன்படி இன்று ஒரே நாளில், இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.232 உயர்ந் துள்ளது.
நேற்றைய நிலவரப்படி,
ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 168-க்கு விற்றது..
இன்று ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.29 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,925-க்கு விற்கப்படுகிறது.
அதே சமயத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 காசுகள் குறைந்து ரூ64.36 ஆக உள்ளது.
வெள்ளி விலை நிலவரம்
ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 900 ஆக உள்ளது.
ஒரு கிராம் ரூ.42.90-க்கு விற்கிறது.
அதாவது கிலோவிற்க 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலையால் ஏற்ற இறக்கம் காணப்பட்டாலும்,திடீரென இருநூறு ரூபாய்க்கும் மேலாக விலை உயர்ந்து விட்டதால் பொதுமக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.