தேசிய கொடி ஏற்றும்போது அதில் பூக்கள் வைப்பது ஏன் தெரியுமா ?

First Published Aug 12, 2017, 12:16 PM IST
Highlights
flowers in national flag


சுதந்திர தின விழாவாக இருந்தாலும் சரி,குடியரசு தின விழாவாக இருந்தாலும் சரி நம் தேசிய கோடியை ஏற்றும் போது, அதில் பூக்களை  வைத்து  கொடியேற்றுகிறோம். அதில் வைக்க பட்டுள்ள பூக்கள் கீழே வந்து விழுவதை பார்த்து கை தட்டுகிறோம்.

ஆனால் எதற்காக பூக்களை வைக்கிறோம் என யாருக்காவது தெரியும்.ஆம் கோடியில் வைக்கப்படும் இந்த பூக்களுக்கு பின் ஒரு சோக சம்பவம் மறைந்து இருக்கிறது என்பது  நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

இந்த கொடி மேலே ஏற அதாவது நாம் சுதந்திரம் பெற எண்ணற்ற தாய் மார்களின் கூந்தலில் இருந்த பூக்கள் கீழே விழுந்து இருக்கிறதுஎன்பதைத்தான் இந்த கொடி மேலே ஏறும் போது, அதில் உள்ள பூக்கள் கீழே விழுந்து அதனை ஞாபக படுத்துகிறது.

இனி ஒவ்வொரு முறையும் கொடியேற்றத்தைக் காணும்போதும் இதை மனதில் நினைத்து பார்க்க வேண்டும். அன்றைய தினம் அந்த நல்ல உள்ளங்கள் தங்கள் கணவர்களை சுதந்திர போராட்டத்திற்கு அனுப்பாமல்இருந்திருந்தால், நாம் இன்னும் எங்கேயாவது செக்கு இழுத்துக் கொண்டுதான் இருந்திருப்போமா என நினைக்கத் தோன்றுகிறது

click me!